கலர் டிவி இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடுகள்..! சீனாவுக்கு செக் வைக்கும் இந்தியா ..!

896

வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) நேற்று இரவு வெளியிட்ட ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து அத்தியாவசியமற்ற பொருட்களின் உள்வரும் இறக்குமதிகளைக் குறைக்கவும் உதவும் எனக் கூறப்படுகிறது.

“இலவசமாக இருந்த வண்ண தொலைக்காட்சியின் இறக்குமதி கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது” என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.


இந்த புதிய கட்டுப்பாடுகளின் கீழ் ஒரு பொருளை இறக்குமதி செய்ய முயன்றால் அந்த பொருளின் இறக்குமதியாளர், வர்த்தக அமைச்சகத்தின் டிஜிஎப்டியிடமிருந்து உரிமம் பெற வேண்டும்.

இந்தியாவிற்கு தொலைக்காட்சி பெட்டிகளை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடு சீனா. அதைத் தொடர்ந்து வியட்நாம், மலேசியா, ஹாங்காங், தென் கொரியா, இந்தோனேசியா, தாய்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.