விஜய்க்கு ட்விட் செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட ரசிகர்… இதையும் விமர்சித்த மீரா மிதுன்!!

933

பாலா……..

நடிகர் விஜயையும் அவரது படத்தையும் பார்க்காமலே போகிறேன் என பதிவிட்டு ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் எங்கும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். சமீபத்தில் விஜய் குறித்து மீரா மிதுன் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், ரசிகர்களின் கோபத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விஜய்யின் ரசிகர் ஒருவர் டிவிட்டரில் விஜய் குறித்து பதிவிட்ட கையோடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பாலா என்ற விஜயின் ரசிகர் டிவிட்டரில் தலைவன் படம் பார்க்காமலே போகிறேன் என்றும் தலைவனையும் பார்க்காமலே போகிறேன் என்றும் கண்ணீர் விடும் ஈமோஜியுடன் பதிவிட்டுள்ளார்.

தனக்கு காதல் தோல்வி இல்லை என்றும் குடும்ப பிரச்சினை என்றும் தன்னை எல்லோரும் வெறுக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய அந்த டிவிட்டை நடிகர் விஜய்க்கும் டேக் செய்து லவ் யூ தலைவா என குறிப்பிட்டுள்ளார்.
இந்த டிவிட்டை பதிவிட்ட கையோடு பாலா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் ஆடிப்போயுள்ளனர்.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் விஜய் நேரடியாக சென்று குடும்பத்திற்கு ஆறுதல் அளித்து ஏதும் உதவி செய்வாரா? என்ற கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.