மானாமதுரையில்..
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்துள்ள மூங்கிலூரணி பகுதியை சேர்ந்தவர் சதுரகிரி(47). இவரது மனைவி ராதிகா. இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சதுகிரி திடீரென காணவில்லை. ஊர் மக்கள் கேட்கும் போது சதுரகிரி வெளியூர் சென்றுள்ளதாக ராதிகா அனைவரிடமும் கூறி நம்ப வைத்துள்ளார்.
ராதிகாவின் பேச்சில் சந்தேகமடைந்த சதுரகிரியின் தந்தை மலைச்சாமி, மானாமதுரை காவல் நிலையத்தில் மகனை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
இதனிடையே சதுரகிரியின் மகன் துரைசிங்கம் சமீபத்தில் அரிவாள் வெட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டார். அப்போது இவரிடம் தந்தை சதுரகிரி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்தனர்.
ராதிகாவின் பேச்சில் சந்தேகமடைந்த சதுரகிரியின் தந்தை மலைச்சாமி, மானாமதுரை காவல் நிலையத்தில் மகனை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
இதனிடையே சதுரகிரியின் மகன் துரைசிங்கம் சமீபத்தில் அரிவாள் வெட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டார். அப்போது இவரிடம் தந்தை சதுரகிரி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்தனர்.