கேக் சாப்பிட்ட சிறுவன் பலி.. காரணம் என்ன?

65

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.பி. அக்ரஹாரா பகுதியை சோ்ந்த பால்ராஜ் மற்றும் நாக லட்சுமி ஆகிய தம்பதிக்கு தீரஜ் என்ற 5 வயது மகன் இருந்தான். அந்த சிறுவனுக்கு, பால்ராஜ் கேக் ஒன்றை வாங்கி வந்து கொடுத்துள்ளார்.

அந்த கேக்கை சாப்பிட்ட சிறுவன் சிறிது நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி உள்ளான். உடனே சிறுவனை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனா்.

அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிகப்பட்டுள்ளது. எனினும் சிறுவன் சிகிச்சை பலனின்றி பலியானான்.

இதுகுறித்து நடத்திய விசாரணையில் சிறுவன் சாப்பிட்ட கேக் தான் எமனாக மாறியது தெரிந்தது. ஏற்கனவே கேக்கில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் கலப்பதாக கர்நாடக அரசு எச்சரித்து இருந்தது.