“சொன்னா கேக்க மாட்டியா”.. அக்கா மகள் என்றும் பாராமல் தாய்மாமா செய்த கொடூரம்!!

183

தன்னை திருமணம் செய்ய மறுத்த அக்கா மகளை துடிக்க துடிக்க கொலை செய்த தாய்மாமனை கர்நாடகா போலீஸார் கைது செய்தனர்.

பெங்களூர்: கர்நாடகாவில் தனது சொந்த அக்கா மகளையே கொடூரமாக கொலை செய்த தாய்மாமாவை போலீஸார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதலில் ஒன்றும் தெரியாதது போல நடித்த தாய்மாமா போலீஸில் சிக்கியது எப்படி என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

கர்நாடகா மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் உள்ள பைசவல்லி பகுதியைச் சேர்ந்தவர் தீபா (21). கல்லூரி பட்டப்படிப்பை முடித்துவிட்டு மேற்கொண்டு படிப்பதற்காக, தீபா பல்வேறு கல்லூரிகளில் விண்ணப்பங்களை வாங்கிக் கொண்டிருந்தார். இந்த சூழலில், அவரது அம்மாவின் சொந்த தம்பியான மால்தேஷ் (35) என்பவர் தீபா மேற்கொண்டு படிக்க வேண்டாம் என்றும், அவருக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைக்க வேண்டும் எனவும் தீபாவின் பெற்றோரிடம் வலியுறுத்தி வந்துள்ளார்.

மேலும், இப்போது காலம் மிகவும் கெட்டுக் கிடப்பதாகவும், காதல் கீதல் என்று வந்துவிட்டால் குடும்ப மானம் கப்பல் ஏறிவிடும் எனவும் அவ்வப்போது கூறி பயமுறுத்தி வந்துள்ளார். ஒருகட்டத்தில், மால்தேஷ் கூறுவது சரிதான் என முடிவெடுத்த தீபாவின் பெற்றோர், அவரை மால்தேஷுக்கே திருமணம் செய்து கொடுக்க முடிவெடுத்தனர். மால்தேஷும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.

ஆனால், தீபாவுக்கு மால்தேஷை சுத்தமாக பிடிக்காது எனக் கூறப்படுகிறது. குடிப்பழக்கம், ஊரில் தகராறு செய்வது என சுற்றித்திரியும் மால்தேஷை தான் திருமணம் செய்ய முடியாது என தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால், தீபாவின் பெற்றோர் எப்படியோ பேசி, தீபாவுக்கும் – மால்தேஷுக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர். அடுத்த மாதம் திருமண தேதி குறிக்கப்பட்டது.

ஆனால், தீபாவோ, தான் மால்தேஷை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என அடம்பிடித்துள்ளார். இதையடுத்து, வேறு வழியின்றி, இந்த விஷயத்தை மால்தேஷிடம் தீபாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தான் தீபாவை சமாதானம் செய்கிறேன் எனக் கூறிவிட்டு, வீட்டின் பின்னால் உள்ள தோட்டத்திற்கு 10 நாட்களுக்கு முன்பு தீபாவை அழைத்துச் சென்றுள்ளார் மாதேஷ்.


அங்கு வைத்து தீபாவை சம்மதிக்க வைக்க மால்தேஷ் முயன்றும், அவர் இணங்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மால்தேஷ், தீபாவை சரமாரியாக தாக்கினார். இதில் தலையில் காயமடைந்த தீபா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் பயந்துபோன மால்தேஷ், தீபாவின் கழுத்தில் அவரது துப்பட்டாவை வைத்து கட்டி, அங்குள்ள மரத்தில் தூக்கு மாட்டுவதை போல தொங்கவிட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

நீண்டநேரமாகியும் மகள் வராததால், சந்தேகமடைந் தீபாவின் பெற்றோர், மால்தேஷுக்கு போன் செய்துள்ளனர். அப்போது தீபா தனது தோழி வீட்டிற்கு சென்றுவிட்டதாக மால்தேஷ் கூறினார். ஆனால் இரவாகியும் தீபா வராததால், சந்தேகமடைந்த பெற்றோர், போலீஸீல் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீஸார் நடத்திய விசாரணையில் நல்ல பிள்ளை போல நடித்துள்ளார் மால்தேஷ். போலீஸாரும் அவரது நடிப்பில் ஏமாந்துள்ளனர்.

இந்நிலையில், தீபாவின் செல்போன் சிக்னலை சோதித்து பார்த்த போது, அது தோட்டத்தில் அருகில் தான் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த போலீஸார், மால்தேஷை தங்கள் பாணியில் விசாரித்தனர். அப்போது, தீபாவை கொலை செய்ததை மால்தேஷ் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அழுகிய நிலையில் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த தீபாவின் உடலை போலீஸார் நேற்று கைப்பற்றினர். சொந்த அக்கா மகள் என்றும் பாராமல் கொலை செய்த மால்தேஷை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.