நடிகர் சூர்யாவின் “அருவா” திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைப்பு! காரணம் என்ன தெரியுமா?

920

நடிகர் சூர்யா தனது “அருவா” திரைப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கருத்திற்கொண்டு அவர் மேற்படி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஹரி இயக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏப்ரல் மாதம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது.


இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் காரணமாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.