இருவரை மணந்து ஏமாற்றி பணம் பறித்த பெண்! மூன்றாம் திருமணம் செய்து கொண்ட நிலையில் செய்த பகீர் செயல்!!

398

இந்தியாவில் இரண்டு பேரை மணந்து பணம் பறித்த பெண்ணொருவர் மூன்றாம் திருமணம் திருமணம் செய்த நபரையும் ஏமாற்றிவிட்டு பின்னர் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெலுங்கானாவின் கரீம்நகர் மாவட்டம் மனகொடூர் பகுதியை சேர்ந்த ரவளி என்ற பெண், கடந்த 2015ஆம் ஆண்டு சுரேஷ் என்பவரை திருமணம் செய்து மூன்றே மாதங்களில் அவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக வழக்கு தொடர்ந்து 3 லட்ச ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளார்.

2வதாக சீனிவாஸ் என்பவரை திருமணம் செய்து ஐந்தே மாதங்களில் அவரும் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாகக் கூறி புகாரளித்து 3 லட்ச ரூபாய் பணம் பெற்றுள்ளார்.

கடைசியாக சுரேஷ் என்பவரை சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்தவர், அவரும் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாகக் கூறி மனக்கோடூரிலுள்ள தண்ணீர் டேங்க் ஒன்றின் மீது ஏறி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார்.


இதனால் அதிர்ச்சியடைந்த பொலிசார் அவரை சமாதானம் செய்து கீழே இறக்கினார்கள்,

பின்னர் 3வது கணவர் கொடுத்த புகாரின்படி வழக்குப் பதிவு செய்து ரவளியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைக்கு பின்னர் இது தொடர்பாக மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.