கேரள நிலச்சரிவு: 2 வயது குழந்தையின் சடலத்தை கண்டுபிடிக்க உதவிய நாய்- நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

348

கேரளா நிலச்சரிவில் சிக்கி பரிதாபமாய் பலியான 2 வயது குழந்தையின் சடலத்தை நாயின் உதவியுடன் மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.

இடுக்கி மாவட்டம் மூணாறை அடுத்த ராஜமலை பெட்டிமுடி பகுதியில், கனமழை காரணமாக கடந்த 7-ந் திகதியன்று அதிகாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. சுமார் 20 வீடுகள் மீது ராட்சத பாறைகள் உருண்டு விழுந்ததில், 78 பேர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்தனர்.

இதில் மூன்று பேர் மட்டும் தப்பி வந்து தகவல் தர, மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட 7-ந்தேதி மட்டும் 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற மீட்புப் பணிகளின் மூலம் 55 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.


இந்நிலையில் 2 வயது குழந்தையான தனுஷ்காவின் உடல் Koovi நாயின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இடுக்கியின் பாராளுமன்ற உறுப்பினர் கூறுகையில், Cemet bridge அருகே உள்ள மரத்திற்கு அடியில் குழந்தையின் சடலம் இருந்தது.

மோப்ப சக்தியால் இதை அறிந்து கொண்ட Koovi நாய், மீட்புபடையினரை அழைத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார். மேலும் குழந்தையை மீட்கும் போது சம்பவ இடத்திலேயே தான் இருந்ததாகவும், மிகவும் சோகமாக Koovi நாய் சுற்றித் திரிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Koovi நாய் தவிர, மற்ற இரண்டு நாய்கள் கூட பாசமுடன் வளர்த்த குடும்ப உறவுகளை தேடித் திரிவதாகவும் மீட்புபடையினர் தெரிவித்துள்ளனர்.