வெளியூருக்கு சென்ற பணக்கார தொழிலதிபர்! வீட்டில் தனியாக இருந்த மனைவி… வீடு திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

430

இந்தியாவில்……

இந்தியாவில் பணக்கார தொழிலதிபர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு பொலிசார் வேடத்தில் வந்த கொள்ளையர்கள் அவர் மனைவியை ஏமாற்றி லட்சக்கணக்கிலான பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் நிரஞ்சன் ஷா. இவர் தொழிலபதிபர் ஆவார். இவர் மனைவி நம்ரதா தேவி.

நிரஞ்சன் ஷா கடந்த 15 நாட்களாக வெளியூரில் இருந்த நிலையில் சமீபத்தில் ஊருக்கு திரும்பி உறவினர் வீட்டில் தங்கியிருக்கிறார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அவர் வீட்டுக்கு மூன்று பேர் பொலிசார் உடையில் வந்தனர்.

பின்னர் தனியாக இருந்த நம்ரதாவிடம், உங்கள் கணவர் பெயரில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது, அது குறித்து விசாரிக்க வந்தோம் என கூறினார்கள்.


இதனால் பயந்து போன நம்ரதா உடனடியாக கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு இது குறித்து கூறிய நிலையில் அவர் வீட்டுக்கு உடனடியாக வருவதாக தெரிவித்தார். ஆனால் அதற்குள் மூவரும் நம்ரதாவை மிரட்டி படுக்கையறையில் உள்ள பீரோவை திறக்கும்படி கூறினார்கள்.

அவரும் அதை திறந்த நிலையில் உள்ளிருந்த ரூ 3.20 லட்சம் பணம், தங்க செயின், ஒட்டியாணம் மற்றும் சில நகைகளை மூவரும் எடுத்து கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

இதையடுத்து மூவரும் பொலிசார் உடையில் வந்த கொள்ளையர்கள் என்பதை நம்ரதா உணர்ந்தார். இதன்பின்னர் நிரஞ்சன் வீட்டுக்கு வந்த போது கொள்ளை சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதை தொடர்ந்து காவல் நிலையத்துக்கு சென்று நிரஞ்சன் புகார் கொடுத்தார். புகாரை தொடர்ந்து பொலிசார் விசாரணையை தொடங்கினர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சிசிடிவி கமெராவை ஆய்வு செய்ததில் மூன்று கொள்ளையர்களில் இருவர் முகமூடி அணிந்திருந்ததும், ஒருவனின் முகம் மட்டும் அதில் பதிவானதையும் கண்டுபிடித்தனர்.

இதை வைத்து விசாரணையை தொடங்கியுள்ள பொலிசார் விரைவில் கொள்ளையர்களை கண்டுபிடித்துவிடுவோம் என கூறியுள்ளனர்.