அந்த மாதிரி தொழில் செய்ததால் சிறை தண்டனை.. கசப்பான அனுபவத்தை சொன்ன ஷங்கர் பட நடிகை!!

154

புவனேஸ்வரி..

சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி தொடரில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமானவர் தான் புவனேஸ்வரி. இதனை அடுத்து இவர் ப்ரியமானவளே, ரிஷி போன்ற பல படங்களில் நடித்தார்.

ஆனால் இவர் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் மத்தியில் மிகவும் பிரபலமாக்கியது என்றால், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் தான். இந்நிலையில் நடிகை புவனேஸ்வரி தனது வாழ்க்கையில் நடந்த மோசமான அனுபவத்தை பற்றி பேசியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், எனக்கு நடிகை சரோஜா தேவி என்றால் மிகவும் பிடிக்கும். சினிமாவில் அவரை போல தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.


சினிமாவில் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்த சமயத்தில் அரசியலிலும் கவனம் செலுத்த துவங்கினேன். ஆனால் சிலர் சதி செய்து என்னை விபச்சார வழக்கில் சிக்க வைத்தனர். இந்த விஷயம் பொய்யான குற்றச்சாற்று என்று நிரூபித்து, இந்த வழக்கில் இருந்து விடுதலை ஆனேன் என்று புவனேஸ்வரி கூறியுள்ளார்.