என் மகனுக்கு அப்பெண் அக்காள் முறையாவார்! காதலனை மணந்து கர்ப்பமான பெண்ணுக்கு மாமனார் கொடுத்த அதிர்ச்சி!!

446

தமிழகத்தில் அழகு நிலைய பெண்ணை மயக்கி காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞன் ஒருவர், அந்த பெண் கர்ப்பிணியானதும் தவிக்க விட்டு ஓடிய சம்பவம் நடந்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் தற்காகுடியை சேர்ந்த பாண்டிக்குமாரின் மகனான உதயகுமார், அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்த சத்யா என்பவருடன் டிக்டாக் மற்றும் பேஸ்புக் மூலம் பழகி காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்றாலும் வீட்டிற்கு தெரியாமல் தாலி கட்டி ஒரு வருடமாக குடித்தனம் நடத்தி வந்த நிலையில் சத்யா தற்போது கர்ப்பிணியாக இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் பாண்டிக்குமார், காதல் திருமண ஜோடியை தொடர்பு கொண்டு, இருவரும் பிரிந்து வாழ்ந்தால் 2 மாதத்தில் உறவினர்களிடம் எடுத்துக் கூறி இருவருக்கும் ஊரறிய திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

இதனை உண்மை என்று நம்பி மாமனார் சொல்படி திருமணம் முறிவு பத்திரம் ஒன்றையும் எழுதிக்கொடுத்து காதல் கணவனை அவரது தந்தையுடன் அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது.


வீட்டிற்கு சென்ற பின்னர் 60 சவரன் நகையும், 30 லட்சம் ரூபாய் ரொக்கத்துடன் உதயகுமாருக்கு உறவுக்கார பெண் ஒருவரை 2 வது திருமணத்திற்கு பேசி முடித்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து பிரிந்து சென்ற கணவன், செல்போன் நம்பரை சுவிட்ஜ் ஆப் செய்து கொண்டு தலைமறைவாகி விட்டதால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சத்யா தனது மகனுக்கு அக்காள் உறவு முறை கொண்டவர் எனவும், தனது மகனுடன் எந்த சம்பந்தம் கிடையாது என்று ஏற்கனவே திருமண முறிவு பத்திரம் ஒன்றை தன்னிடம் எழுதி கொடுத்து விட்டார் என்று கூறி பொலிசில் இருந்து தப்பியுள்ளார் பாண்டிகுமார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சத்யா 50க்கும் மேற்பட்ட தூக்கமாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் கணவருடன் தன்னை சேர்த்து வைக்க பாண்டிக்குமாரிடம் மீண்டும் கெஞ்சிய நிலையில் அவர் அவதூறாக பேசியியதாக தெரிகிறது.

டிக்டாக்கால் காதலில் விழுந்து, தாலியால் வாழ்க்கையில் இணைந்து, சாதியாலும் மாமனார் செய்த சதியாலும் காதல் கணவனை பிரிந்து தவிக்கும் தனக்கு காவல்துறையினர் தக்க நீதி வழங்குவார்கள் என்ற எதிர்பார்போடு சத்யா காத்திருக்கிறார் என தெரியவந்துள்ளது.