ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் மரணம்.. திருமணத்திற்கு சென்று திரும்பியபோது சோகம்!!

182

இந்திய மாநிலம் ராஜஸ்தானில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் குவாலியரில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி சொகுசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.

அப்போது தோல்பூரில் உள்ள பாரி சதாரின் சுமித்பூரில் இருந்து ஆட்டோ ரிக்ஷா வந்தபோது, இரு வாகனங்களும் பயங்கரமாக மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 8 பேர் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது இந்த சோக நிகழ்ந்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.