கேரளா நிலச்சரிவு; உயிரிந்தோர் எண்ணிகை 43 ஆக உயர்வு.. வெளியான தகவல்!

373

கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை தொடர்ந்து வரும் நிலையில், கேரளா மூணாறு,

பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதையடுத்து, இந்த நிலச்சரிவில் 80 பேர் சிக்கிய நிலையில், நிலச்சரிவில் சரிவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை என்பது 43 ஆக அதிகரித்துள்ளது.


இந்த நிலச்சரிவில்கடந்த 2 நாட்களாக மீட்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மேலும் 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி கயத்தாறு பகுதியில் இருந்து தங்கியிருந்த 40 குடும்பங்களின் வீடுகள் நிலச்சரிவில் முழுமையாக சேதம் அடைந்துள்ளது.