தந்தை வீடியோ வெளியிட்டு தற்கொலை! மகள்கள் இரயில் முன் பாய்ந்து தற்கொலை: பரிதாப சம்பவத்தின் முழு பின்னணி!!

384

இந்தியாவின்…..

இந்தியாவின், ஆந்திரா மாநிலத்தில் மகள் அனுபவிக்கும் கஷ்டத்தை பார்க்க முடியாமல், தந்தை தற்கொலை செய்து கொண்ட நிலையில், மகள்களும் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூரை சேர்ந்தவர் பாபு ரெட்டி. எலக்ட்ரிகல் காண்ட்ராக்டரான இவருக்கு ஸ்வேதா என்ற 26 வயதிலும் சாயி என்ற 20 வயதிலும் இரண்டு மகள்கள் இருந்தனர்.

ஸ்வேதாவிற்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இரண்டு மகள்களையும் பாபுரெட்டி பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார்.

ஆனால் திருமணத்திற்கு பின்னர் ஸ்வேதா வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்தது. அவருடைய கணவன் சுரேஷ் குமார் ரெட்டி ஸ்வேதாவை தினமும் அடித்து துன்புறுத்தி கொடுமை படுத்தி வந்துள்ளார்.


மகள் அனுபவிக்கும் சித்திரவதைகளை மன ரீதியாக தாங்க இயலாத பாபு ரெட்டி கடைசியில் தன் உயிரை விடுவதென தீர்மானித்து, தன் மரணத்திற்கு காரணம் மருமகன் சுரேஷ்குமார் தான் என கூறி வீடியோ ஒன்றை பதிவு செய்துவிட்டு தன் வீட்டுக்கு அருகே உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தங்கள் தந்தையின் மரண செய்தியை கேட்டு மகள்கள் இருவரும் துடித்துப் போயினர். தங்கள் மீது தந்தை வைத்திருந்த பாசத்தால் தான் இந்த நிலை என்பதை அறிந்த 2 பேரும் நேற்று மாலை இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

3 பேரின் சடலங்களையும் மீட்ட பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கெல்லாம் காரணமான மருமகன் சுரேஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

பாசப் போராட்டம் நடத்திய மகள்களும், தந்தையும் ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.