தினமும் கெஞ்சுறாங்க! அப்பா அழுகுறத பார்க்க முடியலை… திருமணமாகி ஒரு ஆண்டிலேயே தூக்கில் தொங்கிய இளம்பெண்!!

909

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. சென்னையை சேர்ந்தவர் பிரியங்கா, இன்சினியரிங் பட்டதாரி, இவருக்கும் நிரேஷ்குமார் என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது.

நிரேஷ்குமார் ஐதராபாத்தில் வேலை செய்வதால் திருமணத்துக்கு பின்னர் அங்கேயே வசித்து வந்தனர். இந்நிலையில் சில மாதங்களிலேயே கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த பிரியங்கா கடந்த 29ம் திகதி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த விவகாரம் பொலிசுக்கு தெரியவர பிரியங்கா மரணம் குறித்து வழக்கு பதிவு செய்த சிந்தாரிப்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.


விசாரணையில் தற்கொலைக்கு முன்னதாக பிரியங்கா எழுதிய கடிதம் சிக்கியது. அதில், அந்தக் கடிதத்தில் பிரியங்கா, திருமணத்துக்கு வரதட்சணையாக நிரேஷ்குமார் மற்றும் அவரது தாயார் 120 பவுன் நகைகள் கேட்டனர்.

முதலில் 40 பவுன் நகைகள் போடப்பட்டு திருமணம் நடத்தப்பட்டது. மீதமுள்ள 80 பவுன் நகைகள் கேட்டு நிரேஷ்குமார் மற்றும் அவரது தாயார் என்னைக் கொடுமைப்படுத்தினர்.

இதனால் அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தேன். மேலும் எனது தந்தை மீண்டும் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ வேண்டும் என நிரேஷ்குமாரிடம் ஒவ்வொரு நாளும் கெஞ்சுவது கண்டு எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

அவர் கண்ணீர் விடுவதை என்னால் பார்க்க முடியவில்லை. நிரேஷ்குமார் மற்றும் அவரது தாயார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் நான் இந்த முடிவை எடுக்கிறேன் என எழுதியிருந்தார். இதனை தொடர்ந்து நிரேஷ்குமாரை கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்தனர்.