மனித தலையை எடுத்து சென்று அடுப்பில் போட்டு சுட்டு சாப்பிட்ட இளைஞன்! கதி கலங்க வைத்த சம்பவம்!!

340

ஆந்திராவில் மனிதனின் தலையை அடுப்பில் போட்டு சுட்டு சாப்பிட்ட சைக்கோ இளைஞனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் வசிக்கும் சுப்ரமணியம் என்பவரின் வீட்டின் அருகே கோணிப்பை ஒன்றில் மனித தலை இருப்பதைக் கண்டு அவ்ர அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதன் பின் அந்த கோணிப்பையை அருகில் பாழடைந்த வீட்டில் வசிக்கும், ராஜு(20) என்ற இளைஞன் அந்த சாக்குப் பையை எடுத்து சென்றுள்ளார்.

இதையடுத்து அவரை பின் தொடர்ந்து சென்று பார்த்த போது, வீட்டினுள் அந்த இளைஞனும், பெண் ஒருவரும் மனித தலையை சுட்டு சாப்பிட்டுள்ளனர்.


இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சுப்ரமணியம் அளித்த புகாரின் பேரில் பொலிசார் அப்பகுதிக்கு விரைந்து வந்து ராஜு மற்றும் அவருடன் வசித்து வந்த பெண் ஒருவரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கைது செய்யப்பட்ட இளைஞன் போதைக்கு அடிமையானவர் என்பதும், அங்கிருக்கும் இரயில் நிலையத்தின் ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குபுறத்தில் கிடைப்பதை எல்லாம் திண்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளான்.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் கடும் பீதியில், பொலிசில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் அப்போது பொலிசிடம் இருந்து தப்பிய இந்த நபர் இப்போது சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.