அசைவ உணவு சமைக்கப் போறீங்களா? உயிருக்கே ஆபத்து.. இதை எல்லாம் மறக்காம தெரிஞ்சுக்கோங்க!!

48

அசைவ உணவு உண்பதில் தவறு ஏதும் கிடையாது. வேட்டையாடிய சமூகத்தில் இருந்து தான் நாம் அனைவரும் வந்திருக்கிறோம்.

நமது உணவு முறையே இயல்பில் வேட்டையாடி உண்பதாக அமைந்திருப்பதால் அசைவ உணவு வகைகளின் மீதான ஈர்ப்பு இருப்பதும் இயல்பு தான். ஆனால், அவை ஆரோக்கியமானதாகவும், ஆயுளை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும் என்பதை மட்டும் உறுதிப்படுத்திக்கோங்க.

எல்லோர் நட்பு வட்டத்திலும் அசைவத்தை ஒரு பிடி பிடிக்கிற நண்பர், தோழின்னு ரவுண்டு கட்டி அடிக்கிற ஆள் இருப்பாங்க இல்ல.

அவங்களுக்கு மிஸ் பண்ணாம ஷேர் பண்ண வேண்டிய கட்டுரை இது. சமீபமாக தமிழகம் முழுவதுமே பல உணவகங்களில் பிரியாணியில் எலி தலை, சிக்கனில் கரப்பான்பூச்சி, சிக்கன் குழம்பில் எலி வால், மட்டன் கிரேவியில் பூரான் என்று வீடியோக்கள் வெளியாகி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகாரும் தெரிவிக்கப்பட்டிருக்கு. அதன் பிறகு அவர்கள் சம்பவ இடங்களுக்கு சென்று சீல் வைத்திருக்கிறார்கள்.

அடுத்த 2 நாட்களில் மீண்டும் அதே அசைவ உணவகம், அதே நபர்களுடன் இயங்குகிறது. நம் வயிற்றைப் பதம் பார்த்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் கிடையது நம்மைத் தவிர.


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் மட்டுமே இருமுறை 1700 கிலோ மற்றும் 1800 கிலோ கெட்டுப் போன ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டிருக்கிறது.

இவை சென்னையிலும், சுற்றுப்புறங்களிலும் இருக்கும் உணவகங்களுக்கு சப்ளை செய்யப்படுவதற்காக டெல்லியில் இருந்து கொண்டு வரப்பட்ட கெட்டுப்போன இறைச்சி.

கொரோனா லாக்-டவுன் காலத்துலேயே அவனவன் கையில உசுரப் பிடிச்சுக்கிட்டு வாழ்றதே பெருசுன்னு பயந்துக்கிட்டு இருந்த போது, மதிய சாப்பாட்டுக்கு கடிச்சுக்க கைவிரலாவது வேணும்னு அடம்பிடிச்ச பசங்க நம்ம பசங்க தான்.

அதனால வெளியூர் போனீங்கன்னா… சைவத்துக்கு மாறிடுங்க. அது முனியாண்டி விலாஸோ யூ-ட்யூப் ரிவ்வீவ்ல வருகிற சால்னா கடையோ.. அசைவத்தை தவிர்த்திடுங்க.

அசைவ உணவு உண்பது தவறில்லை. அதில் நிறைய நன்மைகள் இருந்தாலும், சில ஆபத்துகளும் இருக்கிறது. அசைவ உணவு புரதம் அதிகமிருக்கிறது. உடலின் இயக்கம் சீராக இயங்க புரதத்தின் பங்களிப்பு முக்கியம்.

தாவரங்களில் புரதத்தின் அளவு குறைவாகவே இருக்கும். உடலில் புரதத்தின் அளவு குறையும் போது பலவீனம், சோர்வு, கவனக்குறைவு போன்றவை ஏற்படுகிறது.

இது தவிர ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி போன்றவற்றில் இரும்பு சத்தும் அதிகமிருக்கும். மூளையின் சீரான செயல்பாட்டுக்கும் இரும்பு சத்து அவசியம். ப்ளஸ் எலும்புகளின் உறுதிக்கும், வளர்ச்சிக்கும் கால்சியம் தேவை. சைவ உணவை விட, அசைவ உணவு வகைகளில் கால்சியம் அதிகம். இதெல்லாம் நன்மைகள்.

அதே சமயம், ஆபத்துக்களையும், பக்கவிளைவுகளையும் தெரிஞ்சுக்கோங்க! தினமும் இறைச்சி வகைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தினமும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமிருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சிவப்பு இறைச்சி போன்ற உணவு வகைகளை அதிகம் உட்கொள்ளும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

சிவப்பு இறைச்சியில் இருக்கும் கொழுப்பு தமனிகளை அடைத்து ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்யும். இதனால், மாரடைப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். அசைவ உணவு வகைகளில் கலந்திருக்கும் அதிகமான புரதத்தை ஜீரணிப்பது செரிமான அமைப்புக்கு கடினம்.
அசைவ உணவுகளுடன் சேர்த்து சமைக்க கூடாத பொருட்கள் என்று சில இருக்கின்றன.

தேன் vs இறைச்சி: சுத்தமான தேனுடன் இறைச்சியைச் சேர்த்து சாப்பிடக்கூடாது. இப்படி சாப்பிடுவதால் தேன், அந்த உணவை விஷமாக மாற்றி விடும்.

முள்ளங்கி vs இறைச்சி: வேக வைத்த முள்ளங்கியோடு அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது. அப்படி சேர்த்து சமைத்தால் அந்த உணவு விஷமாக உருமாறிவிடும்.

கிழங்கு வகைகள் vs இறைச்சி: பொதுவாகவே, மண்ணுக்கு அடியில் விளையும் உணவுப்பொருட்கள் உண்பதை பெரும்பாலும் தவிர்ப்போம். கிழங்குகள் மற்றும் இறைச்சி செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்வதுடன், அது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். இந்த காம்பினேஷன் நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறு, வாயுத்தொல்லையை உண்டாக்கும்.

மைதா உணவுகள் vs அசைவ உணவு: மைதாவுக்கு செரிமான சக்தி குறைவு. இவை எளிதில் மலச்சிக்கலை ஏற்படுத்தும்

உளுந்து vs இறைச்சி: கறுப்பு உளுந்துடன் இறைச்சியைச் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். செரிமானத்தில் சிரமத்தை ஏற்படுத்துவதோடு வயிற்றுக்கோளாறு, குமட்டல், வாந்தி, படபடப்பு உண்டாக்கும்.

பயறு vs இறைச்சி: முளைகட்டிய பயறு மற்றும் இறைச்சியில் புரதம் அதிக அளவு உள்ளது. உடல் இயக்கத்துக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்து புரதம் என்றபோதிலும் அதை அதிகமாக எடுத்துக்கொள்வதால் மூட்டுவலி ஏற்படும். இது உடலில் மதமதப்பை ஏற்படுத்தி உற்சாகத்தை இழக்கச்செய்யும்.

கீரை vs இறைச்சி: இறைச்சியுடன் கீரை சேர்த்துச் சாப்பிடுவதால் செரிமானக்கோளாறு ஏற்படும். இதனால் கல்லீரல் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தயிர் vs அசைவ உணவு: அசைவ உணவுடன் தயிர் சேர்க்கக்கூடாது. மேலும், பாலில் இருந்து தயாரிக்கப்படும் எந்த பொருளுடனும் இறைச்சி சேர்த்து சாப்பிடக் கூடாது. தயிருடன் இறைச்சி சேர்த்துச் சாப்பிடுவதால் உருவாகும் ரத்தம் சுத்தமாக இருக்காது. கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் மீனுடன் தயிர் சேர்த்து சாப்பிடவே கூடாது.

குளிர்பானங்கள் vs அசைவ உணவு: அசைவ உணவு உண்டதும் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்கள் சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும். மேலும், செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தி, தூக்கமின்மை, உடல் அசதியை உண்டாக்கும்.

அதே சமயம், நேத்து வெச்ச மீன் குழம்பு ருசி அதிகமாக இருக்கும் என்பதெல்லாம் உண்மை தான். எக்காரணம் கொண்டும், அசைவ உணவுகளை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடவே கூடாது. அப்படி சூடு படுத்தி சாப்பிட்டால், அந்த உணவு விஷம் தான். அத்தனை பிரச்சனைகள், அசைவ உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடும் போது ஏற்படுகிறது.

சிலர் பிரியாணி, கலந்த சாதங்கள் அதிகமாக இருக்கும் போது ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து மறுநாள் சூடுபடுத்தி சாப்பிடுவார்கள் இவற்றில் நிச்சயம் நச்சுத்தன்மை மிகுந்திருக்கும். குறிப்பாக அசைவம் கலந்த பிரியாணியை சூடு படுத்தும் போது, விஷமாகவே மாறி விடுகிறது.

கீரையை சூடு செய்யும் போது நைட்ரைட்டாக மாறுகிறது. இவை புற்றுநோயை உண்டாக்கும் பண்புகளில் ஒன்று. குறிப்பாக குடல் புற்றுநோயை உண்டாக்க கூடும்.

சமையல் எண்ணெய்

சமையல் எண்ணெய் பயன்படுத்தி பொரித்த பிறகு எஞ்சியிருக்கும் எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்தும் போது எண்ணெயின் அடர்த்தி அதிகரிக்க தொடங்கும். இவைதான் இதய நோய் மற்றும் புற்றுநோயை உருவாக்க காரணங்களாக அமைந்துவிடுகிறது.

​உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை சமைத்தபிறகு அதிலிருக்கும் பாக்டீரியாக்கள் மீண்டும் சூடு செய்யும் போது அவை க்ளோஸ்ட்ரிடியம் போட்டுலினியம் எனும் நஞ்சை உருவாக்குகின்றன. இதன் காரணமாக உடல் நல குறைபாடு, ஒவ்வாமை உணர்வு தலைதூக்கும். உருளைக்கிழங்கு போன்றே இதர கிழங்கு வகைகளையும் மீண்டும் சூடு படுத்தி சாப்பிடகூடாது.

அசைவம்

இறைச்சியை முதல் நாள் சமைத்து மீண்டும் மறுநாள் சூடு செய்யும் போது அதிலிருக்கும் புரதமானது மாறுகிறது.இவை ஃபுட் பாய்ஸனாக மாறி உடலை பதம் பார்க்கும். கோழி இறைச்சியை சமைக்காமல் வைத்திருந்தால் ஈகோலி மாதிரியான பாக்டீரியாக்கள் உருவாகும். அதே போன்று நன்றாக சமைக்காவிட்டாலும் இந்த பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கிவிடும். நன்றாக சமைத்த கோழி இறைச்சியை மீண்டும் சூடு படுத்தினாலும் அவை உடல் ஆரோக்கியத்தை பதம் பார்க்கும்.

முட்டை

சாதாரணமாக் செரிமானக்கோளாறு உள்ளவர்களுக்கு முட்டை அலர்ஜி. அப்படி இருக்கும் போது புரதச்சத்து நிறைந்த முட்டையை வேக வைத்து, பொரித்து அவை மீதமிருக்கும் போது மீண்டும் சூடுபடுத்தினால் அவை விஷமாகத் தான் மாறும்.

இது உங்களை பயமுறுத்துவதற்கான கட்டுரைக் கிடையாது.. உயிர் வாழறதுக்காக தான் நாம் சாப்பிடுகிறோம். உயிருக்கே உலை வைக்கிற மாதிரியான உணவுகளைத் தவிர்த்திடுங்க என்கிற அக்கறையில் தான் இந்த கட்டுரை. பிடிச்சிருந்தா கமெண்ட் செய்து, உங்களுக்கு பிரியமானவர்களுக்கும் ஷேர் செய்து அவங்களையும் அலர்ட் பண்ணுங்க.