திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா புதுக்கோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் 22 வயது சத்தியமூர்த்தி. இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் 13 வயதுடைய பள்ளி மாணவியிடம் இன்ஸ்டாகிராமில் பழகி வந்தார்.
தொடர்ந்து மாணவியிடம் காதலிப்பதாக நைசாக பேசி கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவியை பெற்றோர் பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்து, மாணவி கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மாணவியை திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியமூர்த்தியை கைது செய்துள்ளனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.