இரவில் தூங்க ரூமுக்கு சென்ற இளம்பெண் : காலை பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

4655

நெல்லை…

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியர்பட்டி வள்ளளார் தெருவைச் சேர்ந்தவர் சேகர் (வயது 60). பிளம்பரான இவர் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இவர்களுடைய மகள் சுபா வயது (24). பி.காம். சி.ஏ. படித்துள்ளார்.

இந்த நிலையில் சுபா கடந்த 28 ஆம் தேதி இரவு தூங்க தனது அறைக்கு வழக்கம்போல் சென்றுள்ளார். பின் மறுநாள் காலை ஞாயிற்றுக்கிழமை சுபாவின் பெற்றோர் சர்ச்சுக்கு சென்றுள்ளனர்.

அப்போதும் சுபா தனது அறையில் தூங்கி கொண்டிருந்துள்ளார். பின் சர்ச்சில் இருந்து வீட்டுக்கு திரும்பிய சுபாவின் பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டிற்கு வந்து பார்த்த அவர்கள் படுக்கையறையில் சுபா உடல் முழுவதும் கருகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.


மேலும் தீயில் பிரிட்ஜ் ஸ்டெபிலைசர், ஸ்விட்ச் போர்டு, சைக்கிள், குடை, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் எரிந்த நாசமாகி இருந்தன. இதனை கண்ட அவர்கள் கதறி அழுது துடித்தனர்.

மேலும் இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சுபா இறந்தது குறித்து வி.கே.புரம் போலீசார் சந்தேகத்தின் பெயரில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் பதிவான தடயங்களை சேகரித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே சுபா தீக்குளித்து தற்கொலை செய்தாரா? அல்லது வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு ஸ்டெபிலைசர் வெடித்தில் அவர் உடல் கருகி இறந்தாரா? என்பது குறித்து தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.