உடற்பயிற்சி கூடத்தில் மயங்கி விழுந்த 22 வயது பெண்… அடுத்து நேர்ந்த சோகம்!!

205

இந்திய மாநிலம் கர்நாடகாவில் இளம்பெண்ணொருவர் உடற்பயிற்சி கூடத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கர்நாடகாவின் பெங்களுருவின் தாசரஹள்ளியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பணியாற்றி வந்தவர் ஷ்ராவணி.

தாவங்கேரியைச் சேர்ந்த 22 வயதான இவர், பாகல்குண்டேயில் பகுதியில் பணிக்காக வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

ஷ்ராவணி உடற்பயிற்சி கூடத்தில் வரவேற்பாளராக பணியாற்றி வந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென வாந்தி எடுத்துள்ளார்.

அடுத்து அவர் மயங்கி விழுந்ததால் பதறிய சக ஊழியர்கள் உடனடியாக ஷ்ராவணியை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில் அவர் விஷம் அருந்தியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.


ஷ்ராவணியின் இறப்பினை இயற்கைக்கு மாறான மரண அறிக்கையின் கீழ் பகல்குண்டே பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.