“ஏன் கல்யாணத்துக்கு கூப்பிடல” மணமகன் தந்தையை துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்!!

78

உத்திரப்பிரதேச மாநிலத்தில் காஜியாபாத்தின் லோனியில் உள்ள ட்ரோனிகா நகரில் சோனுவின் மகன் தீபான்ஷூவுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் சந்தோசமாக நடந்தது.

அதன்படி நேற்று ஹால்டி விழா நடைபெற்றபோது சந்தோஷமாக நடந்து முடியும் என உறவினர்கள் நினைத்தனர். இந்நிலையில், அங்கு வந்த மணமகனின் பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் வன்ஷ் வால்மீகி பரபரப்பை கிளப்பும் வகையில் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

திடீரென இந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதை பார்த்ததும் நிகழ்ச்சியில் இருந்தவர்கள் என்ன நடக்குது இங்க? என்பது போல முழித்தார்கள். இந்த சம்பவத்தின் போது மணமகனின் தந்தை சோனுவுக்கு காயம் ஏற்பட்டது. பிறகு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி தப்பித்து ஓடினார்.

போலீசார் அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்திய போது தான் அவர் இந்த மாதிரி மோசமான சம்பவத்தில் ஈடுபட திருமணத்தின் ஹால்டி நிகழ்ச்சியில் தன்னை அழைக்கவில்லை என்பது தான் காரணம் என கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மணமகன் ” என்னுடைய திருமணத்திற்கான இந்த ஹால்டிவிழாவிற்கு நெருங்கிய உறவினர்கள் வருகை தந்தனர்.

எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் வான்ஷ் வால்மீகி மற்றும் அவரது நண்பர் தருண் தாக்கூர் இருவரும் வீட்டிற்கு வெளியே வந்து தகாத வார்த்தைகளை பேசி எங்களை எதுக்கு அழைக்கவில்லை என்பது போல பேசினார்கள்.


என் தந்தை எதிர்த்தபோது, ​​வான்ஷ் ஒரு நாட்டுத் துப்பாக்கியை எடுத்துசுட தொடங்கினார். உடனே நாங்கள் என் தந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்” என வாக்குமூலம் அளித்துள்ளார்.