கடிதம் எழுதி வைத்துவிட்டு பாடசாலை மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை!

476

மஸ்கெலியா………..

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோலாங்கந்தை தோட்டத்தில் பாடசாலை மாணவி ஒருவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவர் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டொகம் தோட்ட சோலகந்தை பிரிவை சேர்ந்த 18 வயதுடைய ராமகிருஷ்ணன் தர்சிகா என்ற பாடசாலை மாணவியென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவி தனது வீட்டில் தாயின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன், உயிரிழப்பதற்கு முன்னர் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.