கணவனை கொலை செய்துவிட்டு காதலனுடன்… மனைவி போட்ட பயங்கரமான ஸ்கேட்ச்!!

361

தமிழகத்தில் காதலனுக்காக கணவனை கொடூரமாக கொலை செய்ய நினைத்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவருக்கு காய்த்ரி என்ற மனைவி உள்ளார்.

கணேஷ் வீடியோகிராபராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணேஷ் திடீரென்று கீழே விழுந்துவிட்டதால், தலையில் பலமாக அடிபட்டு ரத்தம் கொட்டிவிட்டதாக கூறி குடும்பத்தினரிடம் கதறி அழுதுள்ளார்.

இதனால் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் கணேஷை உடனடியாக மீட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் கணேஷுக்கு நினைவுக்கு திரும்பவேயில்லை. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கணேஷ் தற்போது வரை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், இதுகுறித்து உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது கட்டிலில் இருந்து கீழே விழுந்தால் எப்படி இவ்வளவுள பெரிய காயம் ஏற்பட்டும், யாரோ பயங்கரமாக மண்டையில் அடித்திருப்பது போன்று தெரிவதாக பொலிசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.


அதுமட்டுமின்றி கணேஷின் உயிர்நாடி நசுக்கப்பட்டு, அவரது விலா எலும்பு முறிந்துள்ளது. இதையடுத்து பொலிசார் காயத்ரியிடம் விசாரணையை தீவிரப்படுத்திய போது, திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அதில், காயத்ரிக்கும் யாசின் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகும் அளவிற்கு இருந்து வந்துள்ளனர். இதற்கு கணவர் கணேஷ் முட்டுக்கட்டையாக இருப்பதால், அவரை தீர்த்து கட்ட காயத்ரி முடிவு செய்துள்ளார்.

அதன் படி, கணவனை கொலை செய்வதற்காக கூலிப் படைக்கு 2 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். சம்பவத்தன்று கணேஷ் தூங்கியதும், யாசினுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தும் உள்ளார். அதன் பிறகு கூலிப்படையுடன் வந்த யாசின், கணேஷை அடித்து தாக்கி உள்ளனர். வேறு ஒரு பெண்ணுடன் உறவு இருப்பதுபோல சித்தரிக்கவே, உயிர் நாடியை நசுக்கி விட்டு சென்றுள்ளனர்.

கணவன் எப்படியும் இறந்துவிடுவார் என்று நினைக்க இறுதியில் பொலிசாரின் விசாரணையில் சிக்கிக் கொண்டனர். இதில் விஜயகுமார், கருணாகரன், என்ற 2 பேரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும், காதலனான யாசின் தலைமறைவாகிவிட்டதால் பொலிசார் அவரை தேடிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.