கர்ப்பமான காதலி.. விடிந்தால் திருமணம்.. இரவோடு இரவாக மண்டபத்தில் இருந்து ஓடிய மணமகன்.. இறுதியில் நடந்த சோகம்!!

305

சென்னையில்..

சென்னை புதுபெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் (29) என்பவருக்கும், சேலத்தை சேர்ந்த பட்டதாரி பெண்ணுக்கும் கடந்த மாதம் இறுதி வாரத்தில் திருமணம் நடத்த பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டிருந்தது. சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள மண்டபத்தில் திருமண வரவேற்பு நடந்த நிலையில் விடிந்தால் திருமணம் என்ற நிலையில் மாப்பிள்ளை திடீரென தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த திருமண வீட்டார் எல்லா இடங்களிலும் தேடிய நிலையில் மாப்பிள்ளை,

அதிகாலை 5 மணியளவில் வேட்டி பனியனுடன் வேகமாக வெளியே சென்றது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. புதுமாப்பிள்ளை தப்பிச் செல்ல காரணம் என்ன என்பது தெரியாமல் இருவீட்டாரும் தவித்துப் போனார்கள். இதுதொடர்பாக புதுமாப்பிள்ளையின் தந்தை அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி திருச்செந்தூரில் பதுங்கியிருந்த புதுமாப்பிள்ளை விக்னேஷை பிடித்து சேலம் கொண்டு வந்து விசாரித்தனர்.

அப்போது அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: சாப்ட்வேர் இன்ஜினியரான விக்னேசுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்தனர். அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் திடீரென இறந்துபோனதால் திருமணம் தள்ளி வைக்கப்பட்டது.


இந்நிலையில் பிரபல நிறுவனத்தில் விக்னேஷ் வேலைக்கு சேர்ந்தார். அப்போது கேரளாவை சேர்ந்த இன்ஜினியரிங் படித்த பெண்ணும் வேலைக்கு சேர்ந்தார். நட்பாக பழகிய இவர்கள் காதலிக்கத் தொடங்கியுள்ளனர். இவர்களது காதல் விக்னேசின் பெற்றோருக்கு தெரியவந்தது. ஆனால் அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை.

இந்நிலையில் தனக்கு திருமணம் நடக்க இருக்கும் விவகாரத்தை காதலிக்கு விக்னேஷ் தெரிவிக்காமல் இருந்துள்ளார். திருமண வரவேற்பு முடிந்த நிலையில் நள்ளிரவில் காதலி செல்போனில் எதேச்சையாக பேசியுள்ளார். அப்போது அவர் ஒரு மாத கர்ப்பமாக இருப்பதாகவும்,

இதனை தனது வீட்டில் தெரிவிக்கப்போவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் அப்பெண் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த விக்னேஷ், காதலிக்கு துரோகம் விளைவித்துவிடக் கூடாது என்பதற்காக யாருக்கும் தெரியாமல் திருமண வீட்டிலிருந்து வெளியேறியது தெரியவந்தது.

கடைசியாக பேசிய செல்போன் எண்ணை வைத்து போலீசார் பேசியதில் காதலி யார் எனவும் கண்டுபிடித்தனர். திருமணமண்டபத்தில் இருந்து வெளியேறிய விக்னேஷ் கோயில் கோயிலாக சென்றுவிட்டு கர்ப்பிணி காதலியை பார்க்க சென்றுள்ளார். கடைசியாக திருச்செந்தூர் சென்றபோது போலீசில் சிக்கியுள்ளார்.

இந்த விவகாரத்தில் புதுமாப்பிள்ளையின் தந்தை மகனை காணவில்லை என கொடுத்த புகாரின்பேரில் அவரை போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். புதுப்பெண் வீட்டிலிருந்து யாரும் எந்தவித புகாரும் கொடுக்கவில்லை. அவர்களுக்கு இழப்பீடு கொடுத்து சமாதானம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.