கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்.. அடுத்தடுத்து பிளான் போட்டு தீர்த்துக்கட்டிய கொடூர மனைவி!!

318

உத்தரப் பிரதேசத்தில்..

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் ராஜேஷ் கவுதம். இவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பிங்கி என்ற மனைவியும் 9 வயதில் மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

ராஜேஷ் ஆசிரியராக இருந்தாலும், அவருக்கு ரூ.45 கோடி மதிப்பில் பூர்வீக சொத்தும் இருந்துள்ளது. அவர் கடந்த 2021-ம் ஆண்டு புதிய வீடு ஒன்று கட்ட திட்டமிட்டார். இதற்காக சைலேந்திர சோன்கர் என்பவரை பணிக்கு அமர்த்தினார்.

இதனல் சைலேந்திரா அடிக்கடி ராஜேஷ் வீட்டுக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அவ்வாறு வந்து சென்றதில், அவருக்கு ராஜேஷ் கவுதம் மனைவியுடன் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி பேசிக்கொண்டதில் அவர்களுக்குள் தகாத உறவு ஏற்பட்டது.

இது ஒருகட்டத்தில் ராஜேஷுக்கு தெரிய வந்ததை அடுத்து, அவர் சைலேந்திரபாபுவை கட்டிட கான்ட்ராக்டில் இருந்து நீக்கியுள்ளார். மேலும், மனைவியையும் கண்டித்துள்ளார்.


கண்டிப்பை பிடிக்காத பிங்கி அடிக்கடி தன்னுடைய கணவருடன் சண்டையிட ஆரம்பித்தார். தொடர்ந்து காதலனுடன் செல்போனிலும் பேசி வந்துள்ளார். இந்நிலையில், தன் காதலுக்கு குறுக்கே நிற்கும் கணவரைக் கொலை செய்து விட்டால், அவரது சொத்தும் தனக்கு வரும், காதலனுடன் சந்தேஷமாக வாழலாம் என திட்டமிட்டார்.

இதனால் சாப்பாட்டில் விஷம் வைத்துக்கொடுத்தார். ஆனால் ராஜேஷ் அந்தச் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று, உயிர் பிழைத்துக்கொண்டார்.

இதனையடுத்து தன்னுடைய காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலைசெய்ய திட்டம் தீட்டினார். ராஜேஷ் தனது பெயரில் 3 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் எடுத்திருந்தார். எனவே, விபத்தில் இறப்பது போன்று செய்து, இன்சூரன்ஸ் பணத்தையும் வாங்க பிங்கி திட்டமிட்டார்.

இதற்காக கொலை செய்ய 4 லட்ச ரூபாய் கொடுத்து ஆட்களையும் ஏற்பாடு செய்துள்ளார். ஆனால், அந்தக் கும்பல் பணத்துடன் ஓடி தலைமறைவானது. பின்னர் தனது காதலனிடம் கணவரை விபத்து ஏற்படுத்துவது போல் கார் ஏற்றிக் கொன்று விடலாம் என கூறியுள்ளார்.

இதற்கு அவரும் ஒப்புக்கொண்டுள்ளார். ராஜேஷ் வழக்கமாக தன்னுடைய மகனுடன் காலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம். நவம்பர் 5-ம் தேதி, ராஜேஷ் தனியாக நடைபயிற்சிக்கு சென்றார்.

அவர் சாலையில் நடந்து சென்றபோது வேகமாக வந்த கார் ஒன்று, அவர் மீது மோதியதில் படுகாயமடைந்து, ராஜேஷ் உயிரிழந்தார். ஆரம்பத்தில் இதனை விபத்து மரணமாகவே போலீஸார் பதிவு செய்தனர்.

 ஆனால், ராஜேஷின் சகோதரர் கொடுத்த புகாரின்பேரில், போலீஸார் இது குறித்து விசாரிக்க ஆரம்பித்தனர். போலீஸாரின் விசாரணையில் ராஜேஷின் 9 வயது மகன் வாக்குமூலத்தால், பிங்கி சிக்கினார்.

ராஜேஷ் மகனிடம் விசாரித்தபோது, `சம்பவம் நடந்த அன்று நான் என்னுடைய தந்தையுடன் நடைபயிற்சிக்காக கிளம்பிக்கொண்டிருந்தேன். டிரஸ் அணிந்து வீட்டைவிட்டு வெளியில் வந்துவிட்டேன்.

அதன் பிறகு என்னுடைய தாயார் என்னை வீட்டுக்குள் வரும்படி அழைத்தார். நான் உள்ளே சென்றபோது, என்னை பாத்ரூமில் போட்டு அடைத்துவிட்டார்.

நான் அப்பாவுடன் போகவேண்டும் என்று சொன்னதற்கு, வீட்டிலிருந்து படி என்று கூறிவிட்டார்” என தெரிவித்தார். இதையடுத்து பிங்கியையும், அவரின் காதலன் சைலேந்திராவையும் போலீஸார் ஒருமாதம் கழித்து கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.