கழுத்தை நெரிக்கும் கடன் ஒரே இரவில் பல மில்லியன் தொகைக்கு உரிமையாளரான தொழிலாளி!!

241

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில், கடனில் தத்தளித்த சுரங்க தொழிலாளி ஒருவர், ஒரே இரவில் பல மில்லியன் தொகைக்கு உரிமையாளராகியுள்ளார்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து ஒரு பெரிய வைரம் ஒன்று அவருக்கு கிடைத்துள்ளது. அந்த 19.22 காரட் வைரமானது அரசாங்கம் முன்னெடுக்கும் ஏலத்தில் சுமார் 8 மில்லியன் ரூபாய் அளவுக்கு விற்கப்படலாம் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

என்றாவது ஒருநாள் தமது கடனெல்லாம் மொத்தமாக திருப்பிச்செலுத்தும் வகையில் ஒரு வைரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பன்னா நகரில் சுரங்கங்களை குத்தகைக்கு எடுத்து வருவதாக ராஜு கவுண்ட் தெரிவித்துள்ளார்.

பன்னா பகுதியானது வைர இருப்புக்களுக்கு பிரபலமானது. மட்டுமின்றி வைரம் உட்பட விலைமதிப்பற்ற கற்களை நம்பி மக்கள் பெரும்பாலும் மலிவான, ஆழமற்ற சுரங்கங்களை அரசாங்கத்திடம் இருந்து குத்தகைக்கு எடுத்து வருகிறார்கள்.

தனி நபர்கள், குடுபங்கள் அல்லது குழுக்கள் என வைர வேட்டயில் பலர் தற்போதும் ஈடுபட்டு வருகிறனர். இதில் எவருக்கேனும் வைரம் கிடைத்தால், அதை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்.


அதிகாரிகள் அந்த வைரத்தை உரிய முறைப்படி ஏலத்தில் விடுவார்கள். ராஜு கவுண்ட் தெரிவிக்கையில், தமது தந்தை இரண்டு மாதங்களுக்கு முன்னர் குத்தகைக்கு எடுத்த சுரத்தில் இருந்தே, தற்போது வைரம் கிடைத்துள்ளது என்றார்.

19 குடும்பத்தினருக்கு

மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதுடன், கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், மழைக்காலத்தில் மட்டும் சுரங்கத்தில் வேலை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், புதன்கிழமை வாழ்க்கையை மாற்றிய அந்த வைரம் தமக்கு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த வைரம் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது,

ஏலத்தில் கிடைக்கும் தொகையில் அரசாங்க ராயல்டி மற்றும் வரிகள் கழிக்கப்பட்டு மீதமுள்ள தொகை குத்தகை தாரர்களுக்கு அளிக்கப்படும். ராஜு கவுண்ட் தெரிவிக்கையில், முதலில், தனது 500,000 ரூபாய் கடனை அடைக்க வேண்டும்.

நல்ல வீடு ஒன்று கட்ட வேண்டும் மட்டுமின்றி, பிள்ளைகளுக்கான கல்விக்கும் ஒரு தொகை ஒதுக்க வேண்டும் என்றார். அத்துடன் தம்முடன் இருக்கும் 19 குடும்பத்தினருக்கு அந்த தொகையில் பங்கு அளிக்கவும் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.