சிதைந்த நிலையில் நொறுங்கி கிடக்கும் விமானம்… விபத்திற்கு முன் நடந்தது என்ன? வெளிவரும் முக்கிய தகவல்!!

388

இந்தியாவில் ……….

இந்தியாவில் 191 பேருடன் விபத்தில் சிக்கிய பயணிகள் விமானம் முற்றிலுல் சிதைந்த நிலையில் கிடக்கும் புகைப்படங்கள் மற்றும் விபத்திற்கு முன் என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை சொந்த ஊருக்கு அழைத்துவரும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலிருந்து 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 விமான ஊழியர்கள், 2 விமானிகள் என மொத்தம் 191 பேருடன் கேரளாவிற்கு வந்தது.

விமானம் தரையிரங்கிய போது ஓடுதளத்தில் இருந்து விலகியதால் விபத்தில் சிக்கியதாகவும், மற்றொரு புறம் விமானம் கன மழை காரணமாக, மோசமான வானிலையால் தரையிறங்கும்போது ஓடு தளத்தில் இருந்து விலகி 35 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் விமான விபத்திற்கான சரியான காரணம் இன்னும் சரிவர தெரியவில்லை. இருப்பினும் இந்த விபத்து காரணமாக 17 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்நிலையில் இந்த விபத்து காரணமாக குறித்த விமான முற்றிலும் சிதைந்த நிலையில் கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அதை பார்க்கும் போது விமான ஓடு தளத்தின் சற்று மேல் இருந்து தான் கீழே விழுந்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

விமான ஓடு தளத்தில் இருந்து விலகி விபத்தில் சிக்கியிருந்தால், இந்தளவிற்கு விமான இரண்டாக உடைந்திருக்காது என்று கூறப்படுகிறது.

மேலும் விமான விபத்திற்கு முன் மூன்று முறை தரையிரங்க முயற்சித்துள்ளது. கோழிக்கூட்டில் கனமழை பெய்து வரும் நிலையில், விமானம் முதலில் ஓடுதளத்தின் 10-ல் தரையிரங்க முயன்றுள்ளது.

ஆனால், அதில் தரையிரங்காமல் இரண்டாவது முறையாக ஓடுதளத்தின் 28-ல் தரையிரங்க முயற்சித்துள்ளது.

அதன் பின்னர் மூன்றாவது முறை மீண்டும் ஓடுதளத்தின் 10-ல் தரையிரங்கும் போது தான் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக ஜேர்மனியின் ஹாம்பர்க்கை தளமாகக் கொண்ட விமானப் பாதுகாப்பு நிபுணர் குழு தன்னுடைய டுவிட்டரில் பதிவு செய்துள்ளது.