தாய் வீட்டிற்குப் பிரிந்து சென்ற மனைவி.. விரக்தியில் கணவர் எடுத்த விபரீத முடிவு!!

120

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள புலிகுத்தியில் பழனிச்சாமி என்பவர் மகன் சுரேஷ் கண்ணன் அப்பகுதியில் சுமார் மூன்று வருடங்களாக ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வருகிறார்.

இவருக்கு சர்மிளா தேவி என்ற மனைவி உள்ளார். இரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு சில பிரச்சினை காரணமாக மனைவி தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.

அதனை தொடர்ந்து பெரும் மன அழுத்தத்தில் இருந்து வந்த சுரேஷ் கண்ணனை நேற்று மதியத்தில் இருந்து காணவில்லை என்று உறவினர்கள் தேடி வந்தனர்.

இரவு சுமார் 8 மணி அளவில் வீட்டிற்கு சென்று தட்டிப் பார்த்த பொழுது வீடு திறக்கப்படவில்லை உடனே கதவை உடைத்து பார்த்த போது உள்ளே தூக்கிட்டு இறந்த நிலையில் கிடந்தார்.

இதனைத் தொடர்ந்து உறவினர்கள் சின்னமனூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர் .

காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்த சுரேஷ் கண்ணனின் சடலத்தை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சின்னமனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.