பக்கத்து வீட்டு சண்டையை வேடிக்கை பார்த்தவர் குத்திக் கொலை!!

311

தமிழகத்தில் பக்கத்து வீட்டு சண்டையை வேடிக்கை பார்த்த நபர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தின் திராணி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல், பிபிஏ படித்துவிட்டு வெளிநாடு செல்வதற்காக முயற்சித்து வந்துள்ளார். அதே ஊரை சேர்ந்த மணிவேல், குடிபழக்கத்தில் அடிமையான இவர் அடிக்கடி வீட்டில் சண்டையிட்டு வந்துள்ளார்.

வழக்கம் போல் நேற்று முன்தினம் நள்ளிரவும் குடித்துவிட்டு வீட்டில் சண்டை போட்டுள்ளார். அப்போது பக்கத்து வீட்டிலிருந்து சக்திவேல் இதை வேடிக்கை பார்த்துள்ளார்.

ஏற்கனவே கடும் கோபத்தில் இருந்த மணிவேல், கையில் இருந்த கத்தியை கொண்டு சக்திவேலை குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.
அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சக்திவேல் சரிய, ஓடிவந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். விரைவாக மருத்துவமனை கொண்டு சென்றும் செல்லும் வழியிலேயே சக்திவேலின் உயிர் பிரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவேகம்பத்து போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள காட்டுப்பகுதியில் நின்றிருந்த மணிவேலை கைது செய்தனர்.


விசாரணையில், சிறு வயதில் இருந்து சக்திவேலை தனக்கு பிடிக்காது என்றும், தன்னுடைய தங்கையை காதலித்ததால் ஆத்திரத்தில் அவரை குத்தியதாகவும் மணிவேல் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.