பட்டப்பகலில் அடுக்குமாடி விளிம்பில் தலைவிரிகோலமாக சுற்றிய சிறுமி! நெஞ்சை உறைய செய்யும் திக்திக் நிமிடங்கள்!!

310

பட்டப்பகலில் அடுக்குமாடி கட்டிடத்தின் 23ஆவது மாடியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வெளிப்புற விளிம்பில் தலைவிரிகோலமாக சிறுமி ஒருவர் நடந்து திரிந்துள்ளார்.

உயரமான மாடியில் ஏதோ ஒரு உருவம் தெரிந்ததால் அருகில் உள்ளவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். 15 வயதே நிரம்பிள குறித்த சிறுமி இதே போல் 3 முறை அந்த விளிம்பில் சுற்றியுள்ளார். இது அப்பகுதியில் பார்ப்பவர்களை அச்சமடைய செய்துள்ளது.

இது குறித்த விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சிறுமியை கண்டுப்பிடித்துள்ளனர்.

மேலும் சாகசத்தில் ஈடுபட்ட சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தியதில், அண்ணன் தங்கைக்கு இடையே நடந்த போட்டியின் காரணமாக ஒரு உற்சாகத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இது போன்ற விபரீத செயலில் ஈடுபட்டதாக ஒப்புக் கொண்டனர்.


இதுகுறித்து வருத்தம் தெரிவித்த சிறுமியின் பெற்றோர் இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடைபெறாது என வாக்குறுதியும் அளித்துள்ளனர்.

இதேவேளை, சிறுமி செய்த சாகசங்களை ஊக்கப்படுத்துவது அவர்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள பயன்பட்டாலும், அதற்குரிய பயிற்சிகளையும்,

பாதுகாப்பு செயல்முறைகளையும் பயன்படுத்துவது முக்கியமாகிறது என்பதையும் நாம் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.