பூங்காவில் தொங்கிய மாணவியின் சடலம்… கதறித் துடித்த பெற்றோர்.. நடந்தது என்ன?

427

கிருஷ்ணகிரியில்..

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானசந்திரம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகள் கோபிகா. அவருக்கு 19 வயது. கிருஷ்ணகிரி தளியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் கோபிகா முதலாம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். மாணவி யாரிடமாவது செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது.இதை கவனித்த பெற்றோர், மகள் கோபிகாவை செல்போனில் தொடர்ந்து பேச வேண்டாம் என கண்டித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த மாணவி நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியேறி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் மகளை தேடினர். ஆனால் மாணவியை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், ஓசூர் சந்திரா சுடேஸ்வரர் மலைக்கோயில் பின்புறமுள்ள பூங்காவில் உள்ள மரத்தில் மாணவி ஒருவர் செவ்வாய்க்கிழமை தூக்கில் தொங்கினார்.

அந்த வழியாக சென்றவர்கள் ஓசூர் காவல்துறையினருக்கும், மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.


விசாரணையில், தூக்கில் தொங்கியது மாணவி கோபிகா என்பது தெரியவந்ததும் மருத்துவமனைக்கு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதனர். மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஓசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.