மகாலட்சுமி படுகொலை : தற்கொலை செய்த கொலையாளி வழக்கை முடிக்க போலீசார் கோரிக்கை!!

5

பெங்களூருவில் மகாலட்சுமி என்ற பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளி தற்கொலை செய்து கொண்டதால் வழக்கை முடிக்க போலீசார் தரப்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது.

நேபாளத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி ( வயது 26). இந்தப் பெண்ணுக்கும் கர்நாடக மாநிலம் நெலமங்களவை சேர்ந்தவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இருந்தது.

இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனினும் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை பிரிந்து அந்தப் பெண் பெங்களூருவில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இதற்காக பெங்களூரு வயாலிகாவல் பகுதியில் ஓன் பிஎச் கே வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். மேலும் அந்த பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் பணி செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பல நாட்களுக்கும் மேலாக, மகாலட்சுமியிடம் இருந்து எந்த செல் போன் அழைக்கும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வாயாலிகாவல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.


அந்த தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் கூட்டி கிடந்த வீட்டுக்குள் புகுந்து சோதனை செய்தனர். அப்போது வீட்டில் இருந்த பிரிட்ஜில், ஒரு பெண்ணின் உடல் துண்டு துண்டாக கூறு போட்டு அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

இதை எடுத்தது உடல் துண்டுகளை போலீசார் கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்தப் பெண் நேபாளத்தை சேர்ந்தவர் என்பதும், அவரை மர்ம நபர்கள் கொடூரமாக ஒன்று உடலை கூறு போட்டு ஃப்ரிட்ஜில் வைத்ததும் தெரிந்தது.

ஆனால் அதற்கான காரணம் பற்றி முதலில் தெரியவில்லை. இந்த சம்பவம் ஒட்டுமொத்த கர்நாடகத்தையும் உலுக்கி உள்ளது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பெங்களூரு மேற்கு மண்டல சட்டம் ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் சதீஷ் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் முக்தி ரஞ்சன் ராய் என்பவர் தான் மகாலட்சுமியை கொலை செய்து உடல்களை துண்டு துண்டாக்கியது தெரிந்தது.

இதையடுத்து தலைமறைவான முக்தி ரஞ்சன் ராயை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வந்தனா். ஆனால் போலீசாருக்கு பயந்த முக்தி ரஞ்சன் ராய், தனது குடும்பத்தினரிடம் கொலை செய்தது குறித்து கூறிவிட்டு, தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், போலீசார் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய உள்ளனா்.

இந்த நிலையில் வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் மற்றும் கொலையாளி இருவரும் தற்போது உயிருடன் இல்லை என்பதால், இந்த வழக்கை முடிக்க அனுமதிக்க கோரி போலீசார் தரப்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.