மனைவியின் சகோதரியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த கணவன்! அதன் பின்னர் நடந்த சம்பவம்!!

1004

இந்தியாவில்…..

இந்தியாவில் பெண் மற்றும் அவரின் மகன் மர்மமாக உயிரிழந்த சம்பவத்தில் அவரின் கணவர் உள்ளிட்ட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஜெய்ப்பூரை சேர்ந்தவர் அனில் சர்மா. இவர் மனைவி அனிதா (38). தம்பதிக்கு மாயங் (14) என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் கடந்த 25ஆம் திகதி அனிதா மற்றும் மாயங் ஆகிய இருவரும் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தனர்.

இருவரும் விஷம் குடித்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக பொலிசார் தீவிரமாக விசாரித்து வந்த நிலையில் அவர்களின் சந்தேக பார்வை அனில் மீது திரும்பியது.

அவரிடம் நடத்திய விசாரணையில் மனைவி, மகனை கொலை செய்ததை ஒப்பு கொண்டார்.


பொலிசார் கூறுகையில், அனிலுக்கும், அனிதாவின் இளைய சகோதரி பூஜாவுக்கும் காதல் ஏற்பட்டிருக்கிறது.

இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர், ஆனால் இவர்களின் காதலுக்கு அனிதா எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து பூஜா மற்றும் தனது சகோதரர் சுனிலுடன் சேர்ந்து மனைவி, மகனை கொலை செய்ய அனில் முடிவு செய்தார். அதன்படி மூவரும் சேர்ந்து அனிதா மற்றும் மாயங்கை கொலை செய்துள்ளனர்.

நாங்கள் கூட முதலில் இது தற்கொலை என்றே கருதினோம், ஆனால் அனில் நடவடிக்கை தான் அவரை சிக்க வைத்தது. தற்போது இதில் சம்மந்தப்பட்ட மூவரையும் கைது செய்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.