வீட்டை விட்டு வெளியேறிய மருமகளுக்காக மாமியார் செய்த திடுக்கிடும் செயல்! ஜோசியரால் நடந்த விபரீத சம்பவம்!!

330

இந்தியாவில் மனைவி, கணவருடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், மாமியார் அவருக்காக நாக்கை அறுத்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் செராகேலா-கர்சவன் மாவட்டத்தில் இருக்கும் என்ஐடி பகுதியில் வசித்து வருபவர் லட்சுமி நிர்லா.

இவருக்கு ஜோதி என்ற மருமகள் உள்ளார். இவர்களுக்குள் எப்போதும் சண்டை வந்த படி இருந்துள்ளது. இதனால் கடந்த 14-ஆம் திகதி ஜோதி திடீரென்று தன் குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

வீட்டை விட்டு வெளியேறிய அவரை கணவர் தேடாமல், மாமியாரான நிர்லா பட இடங்களில் தேடியுள்ளார். ஆனால், அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அவர் தன் மகனிடம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கும் படி கூறியுள்ளார். இதையடுத்து பொலிசாரும் ஜோதியை தேட ஆரம்பித்துள்ளனர்.


இதற்கிடையில் மருமகள் காணமல் போய் நாட்கள் சென்று கொண்டே இருந்ததால், ஜோதிடர் ஒருவரை பார்த்துள்ளார். அப்போது, அந்த ஜோதிடம் நாக்கை வெட்டி கடவுளுக்கு காணிக்கை செலுத்தினால் மருமகள் திரும்பி வருவார் என்று கூறியுள்ளார்.

இதனால் உடனடியாக அருகில் இருக்கும் சிவபெருமான் கோவிலுக்கு கையில் பிளோடு சென்ற அவர், கண்ணை மூடிக் கொண்டு, அங்கு திடீரென்று தன்னுடைய நாக்கை பிளேடால் அறுத்து, அங்கிருக்கும் உண்டியலில் போட்டுள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், உடனடியாக அலறி அடித்து ஓடியுள்ளனர். அதன் பின் சிறிது நேரம் கழித்து அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைக்க, இரத்தம் சொட்டி கொண்டிருக்கும் நிலையிலும், அப்படி வந்தால், இது தெய்வ குற்றம் ஆகிவிடும், என் மருமகள் கிடைக்கமாட்டாள் என்று கூறியுள்ளார்.

அதன் பின் அவரை ஒரு வழியாக சமாதானம் செய்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இப்போது அவரால் வாய் திறந்து பேச முடியவில்லை.

இது குறித்து லட்சுமியின் கணவர் கூறுகையில், யாரோ நாக்கை வெட்டி சாமிக்கு தந்தால் ஜோதி திரும்பி வந்துவிடுவார் என்று யாரோ சொல்லியதைக் கேட்டு இப்படி செய்துவிட்டாள் என்று கூறியுள்ளார்.