13 வயசு மாணவி பேருந்து ஓட்டுனருடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை : திடுக்கிடும் தகவல்!!

615

கர்நாடக….

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் அஜ்ஜம்பூர் வங்கினகட்டே பகுதியில் வசித்து வருபவர் 14 வயது பள்ளி மாணவி. இவர் கிரியாபூர் கிராமத்தில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தோழிகளுடன் புத்தாண்டை கொண்டாட செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

அன்றைய தினம் இரவு முழுவதும் சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் பலனில்லை. அன்றைய தினமே நள்ளிரவு நேரத்தில் ரயிலில் அடிபட்டு 2 பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்தது.

பெற்றோர்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கு சென்று பார்த்தபோது அவர்கள் காணாமல் போன 14 வயது சிறுமி மற்றும் பள்ளி பேருந்து ஓட்டுநர் சந்தோஷ் இருவரும் உயிரிழந்த நிலையில் கிடந்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.


இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி 8 ம் வகுப்பு சிறுமியும், 38 வயது பள்ளி பேருந்து ஓட்டுநர் சந்தோஷும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

சந்தோஷ் நடவடிக்கை குறித்து சிறுமியின் பெற்றோர் பலமுறை பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்தனர். ஆனால் பள்ளி நிர்வாகம் அலட்சியமாக இருந்ததாக தெரிகிறது.

புத்தாண்டை கொண்டாட செல்வதாக கூறிவிட்டு சென்ற சிறுமி, பேருந்து ஓட்டுநர் சந்தோஷுடன் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்த நிலையில், விபத்தா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.