16 வயது சிறுமிக்கு தாலி கட்டி கர்ப்பமாக்கிய 18 வயது சிறுவன்! குழந்தையும் பிறந்தது: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

479

தமிழகத்தில் 16 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த சம்பவத்தில், 18 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலுார் மாவட்டம், காட்பாடி பகுதியைச் சேர்ந்த, 16 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், இவர் பிரசவத்திற்காக வேலுார் அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டிருப்பதாக, சமூக நலத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக அங்கு சென்று விசாரணை மேற்கொண்ட போது, மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது தெரியவந்தது.


இதற்கு காரணம் 18 வயது சிறுவன் தான் என்பதும் தெரியவந்துள்ளது. எதிர்வீட்டை சேர்ந்த 18 வயது சிறுவனும், இந்த சிறுமியும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த ஆண்டு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு, வீடு திரும்பியுள்ளனர்.

இதில், குறித்த சிறுமி தாலியை மறைத்து வைத்துக் கொண்டு திருமணம் நடக்காதது போல் வீட்டில் நாடகமாடி வந்துள்ளார்.

இருப்பினும் அடிக்கடி இருவரும் சந்தித்து தனிமையில் நெருக்கமாக இருந்ததன் காரணமாக, அவர் கர்ப்பமாகியுள்ளார்.

இதையடுத்து, சிறுவனை பொலிசார் கைது செய்து, வேலுார், அரசு சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.