643 முறை மீறல்… ரூ.30,000 மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு ரூ.3.22 லட்சம் அபராதம்: அதிர்ச்சி சம்பவம்!!

262

பெங்களூருவில்..

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ளது கங்காநகர். இங்கு வசிக்கும் மாலா என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக தனது ஸ்கூட்டியில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்துள்ளார். அவ்வாறு அவர் செல்லும்போதெல்லாம் ஹெல்மெட் அணியாமலும், சாலை விதிகளை மீறியும் சென்றுள்ளார். இதனால் அவருக்கு ஒவ்வொரு முறையும் அபராதம் விதிக்கப்பட்டது.

அவ்வாறு விதிக்கப்பட்ட அபராதம் தற்போது ரூ.3.22 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. KA 04 KF 9072 என்ற பதிவு எண் கொண்ட அந்த வாகனம் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும்போது, அதில் சென்ற நபர் சாலை விதிகளை மீறியுள்ளார். இதனை ஒவ்வொரு ட்ராபிக் பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சி பதிவு செய்து, பொருத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) கேமராக்களைப் பயன்படுத்தி அந்த நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராத தொகையானது, அந்த வாகனத்தின் தொகையை விட அதிகமானதாகும். அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அந்த குறிப்பிட்ட நபருக்கு மெசேஜ் மூலம் தெரிவிக்கப்படும். அவர் கட்ட தவறினால், அது மேலும் மேலும் சேர்ந்துகொண்டு போகும். இறுதியில் அந்த பெண் அபராதத்தை கட்டவில்லை என்றால், அதிகாரிகளால் வண்டி பறிமுதல் செய்யப்படும்.


தற்போது இந்த நபருக்கு இதுவரை சாலை விதிகளை 643 முறை மீறியதாக ரூ.3.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை நகரின் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) கேமராக்களைப் பயன்படுத்தி வழங்கப்பட்டன. இந்த நிகழ்வால் தற்போது அந்த நபர் பெரும் அதிர்ச்சியில் உள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேரளாவில் இளைஞர் ஒருவர் 146 முறை ஹெல்மெட் அணியாமல் டிராபிக் கேமராவில் சிக்கியதால் அவருக்கு ரூ.86,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் ஒவ்வொரு முறையும் அபராதம் கட்டாமல் இருந்து வந்ததால், ஆர்.டி.ஓ., அதிகாரிகள் அவரது பைக்கை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.