7ம் வகுப்பு மாணவன் அடித்துக்கொலை.. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்!!

193

திருவாரூரில்..

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுமன் (45). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்பிகா (38). இவர்களது 2வது மகன் அரவிந்த் (12). 7ம் வகுப்பு படித்து வந்தார். நேற்றுமுன்தினம் காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற அரவிந்த், மாலை 6 மணியாகியும் வீடு திரும்ப வில்லை.

இதுகுறித்து அவரது தாய் அம்பிகா விசாரித்தபோது அரவிந்தை அதே ஊரை சேர்ந்த இளவரசன் (28) என்பவர் உடும்பு பிடிப்பதற்காக ஆற்றங்கரை பகுதிக்கு அழைத்து சென்றது தெரிந்தது.இதையடுத்து அங்குள்ள திருமலைராஜன் ஆற்றங்கரைக்கு தேடி சென்ற போது,

அங்கு புதர் ஒன்றில் மகன் அரவிந்த் சீருடை முழுவதும் நனைந்த நிலையில் தலையில் ரத்த காயத்துடன் சடலமாக கிடந்தார். அருகில் இளவரசன் ஆற்றில் குளித்துவிட்டு தனது கைலி, சட்டைகளை காய வைத்து கொண்டிருந்தார்.தகலறிந்து வந்த போலீசார் இளவரசனை கைது செய்து விசாரணை நடத்தினர்.


அதில், டிப்ளமோ எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் படித்துள்ள இளவரசன், தற்போது மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காக மருத்துவர் ஆலோசனையுடன் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வருவதும் தெரிய வந்தது. கொலையான அரவிந்தை எதற்காக ஆற்றங்கரைக்கு அழைத்து சென்றார் என்று விசாரித்து வருகின்றனர்.