வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்… மூன்று நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு : கதறும் குடும்பம்!!

313

சென்னை…

சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத கன மழையினால் தலைநகரமே ஸ்தம்பித்து போய் உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.

மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பேருந்து போக்குவரத்து, ரயில் சேவை ஆகியவை பாதிக்கப்பட்டன. மேலும் கனமழையினால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இந்த கன மழைக்கு இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சென்னை பள்ளிக்கரணையில் கடந்த 4-ம் தேதி பெருவெள்ளத்தில் சிக்கிய தனியார் நிறுவன ஊழியர் முருகன் உயிரிழந்தார். மூன்று நாட்களுக்கு பிறகு அவரது சடலம் இன்று மீட்கப்பட்டது.


நிவாரண முகாமில் இருந்த முருகன், வீட்டில் இருந்த தந்தையைப் பார்த்துவிட்டு வரும் போது நீரில் சிக்கியுள்ளார். தொலைத்தொடர்பு சேவை இல்லாததால் அவரின் நிலை குறித்து குடும்பத்தினர் தெரியாமலேயே இருந்துள்ளனர். இந்நிலையில், அவரது சடலத்தைப் பார்த்து பெற்றோர் கதறி அழுதது பார்ப்போர் நெஞ்சை உலுக்குவதாக இருந்தது.