திருச்சிராப்பள்ளி….
திருச்சிராப்பள்ளி மாவட்டம், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் விஜய் (வயது 26) என்பவர் இணைய மற்றும் சமூக வலைதள குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்த போது,
04.12.23-ஆம் தேதி சமுக வலைதளமான YouTube மற்றும் Instagram -ஐ பார்த்துக் கொண்டு இருந்தபோது inba’s track என்ற பெயரில் @inba’s track – என்ற ஐடி -யை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் ஆபாசத்தை தூண்டும் வகையில் பேசுவதுபோல சமூக வலைதளங்களில் ஆங்கிலத்தில் TEXT வருவது போல mono-acting மூலம் வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார்.
மேலும், இவரின் mono-acting வீடியோக்களை பார்க்கும்போது, வீடியோக்கள் அனைத்தும் அருவருக்கத்தக்க வகையிலும், ஆபாசமான வகையிலும் உள்ளது. இவ்வீடியோக்களை பார்க்கும் மாணவ, மாணவியர்கள் மற்றும் கல்லூரியில் படிக்கும் இளைஞர்களிடம் மீண்டும் வீடியோக்களை பார்க்க தூண்டி, பாலுணர்வுகளை தாண்டும் வகையிலும், ஆபாசமாகவும், மேலும் முதலிரவு பற்றிய வீடியோக்களை அனுப்பியும்,
பெண்களை பற்றி தவறாக சித்தரித்தும் mono-acting மூலம் பல வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து Instagram -ல் 82,000-க்கும் மேற்பட்ட Followers மற்றும் YouTube-ல் 1,93,000 subscribersபெற்று உள்ளதால், இவரது வீடியோக்களைப் பார்க்கக் கூடிய குழந்தைகள், பெண்கள்; மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் இடையே பாலியல் தொடர்பான எண்ணங்கள் ஏற்பட்டு பாலியல் குற்றச் செயலில் ஈடுபட வாய்ப்புள்ளது.
இதனால் இளைஞர் சமூதாயத்திற்கு சீர்கேடு ஏற்படும் வகையிலும், மேலும் பெண்களின் நாகரிகத்தை இழிவுப்படுத்தும் வகையில் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக திருச்சிராப்பள்ளி மாவட்டம், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் குற்ற எண்.
32/23, U/s 292(a), 294(b), 509 IPC & 67, 67-A, 67-B of IT Act. & 4 r/w 6 of Indecent Representation of Women (Prohibition Act.) மேற்படி சமூக வலைதளத்தை பயன்படுத்திய நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.