மைதானத்தில் சரிந்து விழுந்து கபடி வீரர் திடீர் மரணம்.. சோகத்தில் கதறிய கல்லூரி நண்பர்கள்!!

118

புதுக்கோட்டையில்..

புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுபட்டி பகுதியில் வசித்து வந்தவர் தங்கராஜ். இவருடைய மனைவி தமிழரசி. இவர்களுக்கு யோகேஸ்வரன், சிவா என 2 மகன்கள். இதில் யோகேஸ்வரன் கபடி வீரர். இவர் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பி.ஏ. 3ம் ஆண்டு படித்து வந்தார் இந்நிலையில் அன்னவாசல் மாங்குடியில் நேற்று கபடி போட்டி நடத்தப்பட்டது.

இதில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர். கபடி போட்டியில் யோகேஸ்வரன் கலந்து கொண்டு விளையாடினார். விளையாடிக் கொண்டிருந்த போது யோகேஸ்வரன் திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்தார்.

இதனையடுத்து அவரை சக வீரர்கள் மீட்டு அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு யோகேஸ்வரனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.


இதனால் கபடி போட்டி ரத்து செய்யப்பட்டது.இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மைதானத்தில் கபடி வீரர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.