வேலைக்கு சென்ற பெண் பரிதாபமாக பலியான சோகம்!!

362

கிருஷ்ணகிரியில்..

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் தஞ்சமடைந்த 18 யானைகள் கூட்டம் கடந்த வாரம் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது. இந்நிலையில் வனப்பகுதிகளில் சுற்றித்திரியும் ஒற்றை யானை மட்டும் இரவு நேரங்களில் வெளியே வந்து அருகில் உள்ள விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை, கெலமங்கலம் பகுதியில் உள்ள ஓட்டலுக்கு அதே ஊரைச் சேர்ந்த மம்தா (வயது 27) வேலைக்குச் சென்று கொண்டிருந்தார் ​​அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று லிப்ட் கேட்டு மம்தா ஏறிச் சென்றார். அப்போது எதிரே வந்த ஒற்றை யானை தாக்கியதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சாரதி வாகனத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தகவல் அறிந்து வந்த கிராம மக்கள், பெண்ணின் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த உத்தனப்பள்ளி போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.


ஆனால், மாவட்ட ஆட்சியர் வர வேண்டும் என்று கோரி கிராம மக்கள் உடல்களுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒரு யானையும் சிறிது நேரம் அப்பகுதியில் சுற்றித் திரிந்தது. அப்பகுதி மக்கள் அதை வனப்பகுதிக்கு விரட்டினர். சாலை மறியல் போராட்டத்தால், உத்தனப்பள்ளி கெலமங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.