2 குழந்தைகளுடன் விபரீத முடிவெடுத்த தம்பதி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

7

பெங்களூருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தம்பதி மற்றும் குழந்தைகள் என 4 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனா்.

பெங்களூரு எலகங்கா தாலுகா சிங்காநாயக்கனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் அவினாஷ் (வயது 33). இவரது மனைவி மம்தா (30). இந்த தம்பதிக்கு அதீரா (5) மற்றும் அனன்யா (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள வீட்டில் இவர்கள் 4 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனா். அவர்களது உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனா்.

சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா். கடன் தொல்லை காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.