பட்டப்பகலில் குழந்தைகள் கடத்தல்.. அதிரடி காட்டிய போலீஸ்!!

49

கர்நாடக மாநிலம் பெலகாவியில் வீடு புகுந்து 2 குழந்தைகள் கடத்தப்பட்டனா். இதையடுத்து கடத்தல்காரர்களை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனா். பணப்பிரச்சினையில் குழந்தைகள் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் அதானியை சேர்ந்தவர் விஜய் தேசாய். இவருக்கு ஸ்வஸ்தி (வயது 4) மற்றும் வியோம் (3) என்ற 2 குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் அவரது வீட்டிற்கு காரில் மர்மநபர்கள் வந்தனா். அவா்கள் 2 பேரும் விட்டிற்குள் புகுந்தனா். மேலும் வீட்டில் இருந்தவர்களிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளனா்.

உடனே அங்கிருந்தவர்கள் தண்ணீர் எடுத்து வர சென்றனா். அப்போது வீட்டின் உள்ளே இருந்த விஜய் தேசாயின் குழந்தைகள் 2 பேரையும் மா்மநபர்கள் தூக்கி கொண்டு கடத்தி சென்றனா்.

இதுபற்றி அறிந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக அதானி போலீசில் புகார் அளித்தனா். அந்த புகாரை ஏற்ற போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவர்கள் குழந்தை கடத்தல் கும்பல் என தெரிந்தது.

இதையடுத்து அந்த கும்பல் வந்த காரின் பதிவெண்ணை கொண்டு தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது. இதையடுத்து கடத்தல்காரர்கள் இருக்கும் இடம் குறித்து போலீசாருக்கு தெரியவந்தது.


இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனா். அவர்கள் கடத்தல்காரர்களை பிடிக்க முயன்றனா். அப்போது அவர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். இதில் போலீசார் 2 பேர் காயமடைந்தனா்.

அந்த சமயத்தில் போலீசார், கடத்தல்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினா். இதில் ஒரு கடத்தல்காரர் காலில் குண்டு பாய்ந்து காயம் அடைந்தார். இதையடுத்து கடத்தல்காரர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனா்.

மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தினா். அப்போது குழந்தைகளின் தந்தைக்கும், மராட்டியத்தை சேர்ந்தவருக்கும் இடையே ரியல் எஸ்டேட் தொடர்பாக பணப்பிரச்சினை இருந்து வந்தது தெரிந்தது.

அதுதொடர்பான மோதலில் குழந்தைகளை கடத்தியது தெரிந்தது. இந்த வழக்கில் கைதானவர்கள் சிக்கோடியை சேர்ந்த ரவிகிரண், பீகாரை சேர்ந்த ஷாருக்கான் உள்பட 3 பேர் என்பது தெரிந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த கர்நாடகமும் பரபரப்பாகி உள்ளது.