கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் வசித்து வந்த ஷிபா, எம்.எஸ்.சி படித்து வந்தார். ஷிபா கல்லூரிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே பேருந்தில் வந்த ஒரு இளைஞர், ஷிபாவிடம், உன்னிடம் தனியாகப் பேச வேண்டும் என்று கூறினார்.
இதனால், மாணவியும் சென்று அவரிடம் பேசினார். பின்னர் திடீரென ஷிபாவின் கழுத்தை கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனால், அவரது கழுத்தில் இருந்து ரத்தம் வெளியேறி, ஷிபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும், போலீசார் அங்கு சென்று ஷிபாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, முபீன் என்ற இளைஞரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. ஷிபாவும் முபீனும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும், ஷிபாவின் பெற்றோர் காதலை எதிர்த்தனர், வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.
அதன் பிறகு, ஷிபாவும் அவருடன் பேசுவதைத் தவிர்த்தனர். இந்த சூழ்நிலையில், கல்லூரிக்குச் சென்ற ஷிபாவிடம் முபீன் ஏதோ சொல்லி, அவளை தனியாக அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். ஷிபா மறுத்ததால், கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.