மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வருபவர் ராகேஷ் ராஜேந்தரா கேடேகர். இவரும் இவரது மனைவி கவுரி கேடேகாவும் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தனர்.
இவர்கள் அருகிலுள்ள தொட்டகம்மனஹள்ளி கிராமத்தில் உள்ள ஒரு பிளாட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணிக்கு பிளாட்டின் உரிமையாளர் இங்கு மர்மமான சூட்கேஸ் கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். அங்குள்ள வீட்டின் குளியலறையில் மர்மமான ஒரு சூட்கேஸ் இருப்பதை கண்டனர்.
அதனை திறந்து பார்த்த போலீசார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சூட்கேசில் ஒரு பெண்ணின் சடலம் கத்திக்குத்து காயங்களுடன் இருந்தது. உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணின் கணவரான ராகேஷ் இந்த கொலையை செய்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ராகேஷ் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்ததாகவும் புனேவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
மேலும் ராஜேஷுக்கும் அவரது மனைவிக்கும் குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தபட்டு வருவதாகவும் விசாரணைக்கு பின்னர் கொலைக்கான காரணம் தெரியவரும் எனவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.