கோழி குழம்பு வைக்க சொன்ன கணவன்: வீட்டின் பின்புறம் கண்ட அதிரவைக்கும் காட்சி!!

933

தமிழகத்தில் பெற்ற மகளின் கழுத்தை அறுத்து தாயே கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

திருவண்ணாமலை அடுத்த கீழ்சிறுபாக்கத்தை சேர்ந்தவர் கலையரசன், இவரது மனைவி சுகன்யா, இவர்களது 6 வயது மகள் நிவேதா.

சம்பவதினத்தன்று சுகன்யாவிடம் கோழிக்கறி குழம்பு வைக்குமாறு கூறிவிட்டு வெளியில் சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து வீட்டுக்குள் வந்த போது, வீட்டின் பின்புறம் மனைவியும், மகளும் கழுத்தறுபட்ட ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.


அருகில் சென்ற போது மகள் நிவேதா உயிரிழந்தது தெரியவந்தது, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுகன்யாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

முதலில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பொலிசிடம் அளித்த வாக்குமூலத்தில், கடந்த ஓராண்டுக்கு முன்னர் உயிரிழந்த மாமனார்- மாமியார் கனவில் வந்து தங்களிடம் வந்துவிடுமாறு தொடர்ந்து கூறியதால் மகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார்.