யானையிடமிருந்து தப்பித்து ஓடும் போது… நொடிப்பொழுதில் நடந்த துயர சம்பவம்!!

988

கேரளா…..

கேரளாவில் யானையிடமிருந்து தப்பித்து ஓடும் போது கையிலிருந்து குழந்தை தவறி விழுந்து மரணடைந்த சம்பவம் நடந்துள்ளது.

கேரளாவின் பாலக்காடு மாகாணத்தில் இருக்கும் ஆனமட எஸ்டேட்டில் பணியாற்றுபவர் ராமசந்திரன்(வயது 39), இவரது மகன் ரனிஷ்(வயது 3), மருமகள் சரோஜினி(வயது 16).

உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 7 மணியளவில் பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.

மாரியம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது, யானை நிற்பதை பார்த்துள்ளார்.


யாரை துரத்த தொடங்கியதும் மகனை தூக்கிக் கொண்டு ஓடியுள்ளார், இவர் ஒரு பாதையிலும், சரோஜினி ஒரு பாதையில் ஓடினர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ரனிஷ் கையிலிருந்து நழுவி விழுந்ததில் கல்லில் மோதியுள்ளான், இதில் அவனது தலையில் பலத்த காயம் ஏற்பட சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

யானை துரத்தியதால் தன் மகனை இழந்த துக்கம் தாங்காமல் ராமச்சந்திரன் கதறி அழுதுள்ளார்.