முதல் திருமணத்தில் 5 குழந்தைகளுக்கு தாயான பெண்! விவாகரத்துக்கு பின்னர் நடந்த மறுமணம்.. அடுத்து காத்திருந்த அதிர்ச்சி!!

907

இந்தியாவில் மனைவியை கணவன் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் மாங்கே கிராமத்தை சேர்ந்தவர் ஷனி தேவி (39). இவர் கணவர் லல்ஜித். இந்த தம்பதிக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில் லல்ஜித்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தேவி அவரை சில வருடங்களுக்கு முன்னர் விவாகரத்து செய்தார்.

இதன்பின்னர் கவு மஞ்சி என்பவரை தேவி இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.


ஆனால் மஞ்சி – தேவி தம்பதிக்கு குழந்தை இல்லாத நிலையில் இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது.

இந்த நிலையில் தேவியின் முதல் கணவர் லல்ஜித் சில தினங்களுக்கு முன்னர் அவரை சந்தித்து பேசி கொண்டிருந்தார்.

இதை பார்த்த மஞ்சிக்கு தேவி மீது ஆத்திரம் வந்தது.

இதையடுத்து கூரான ஆயுதத்தை எடுத்து கொண்டு தேவியிடம் வந்தார், இதை பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்த நிலையில் தேவியை குத்தி கொன்ற மஞ்சி பின்னர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் தேவி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு தலைமறைவாக உள்ள மஞ்சியை தேடி வருகின்றனர்.