Monday, March 31, 2025

Tamil 360 Admin

Tamil 360 Admin
1362 POSTS 0 COMMENTS
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம், பத்தனம்திட்டாவை சேர்ந்தவர் மேகா(24). இவர் மத்திய உளவுத்துறையான ஐபியில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். கடந்த வருடம் முதல் இவர் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் குடியுரிமை வழங்கல் பிரிவில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் விமான நிலையத்தில் தனது இரவுப் பணிகளை முடித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பி சென்றுக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று காலை விமானநிலையம் அருகே உள்ள சாக்கை என்ற இடத்தில் ரயில்வே...
இலங்கையில் பெரும் அதிர்ச்சி தரும் சம்பவமாக களுத்துறையில் காதலனைப் பார்ப்பதற்காக, காதல் வீட்டிற்கு சென்ற இளம்பெண், வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வாதுவ, மொரோந்துடுவ பகுதியைச் சேர்ந்தவர் பிரசாதினி பிரியங்கிகா. 23 வயதுடைய பிரசாதினி பிரியங்கிகா, நேற்று மதியம் களுத்துறையில் உள்ள தனது காதலனைக் காண்பதற்காக, காதலனின் வீட்டிற்குச் சென்ற போது இந்த துரதிஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பிரியங்கிகாவின்...
கள்ளக்காதல் தொடர்பில் இருந்த ரியல் எஸ்டேட் அதிபருக்கு தூக்க மாத்திரை கொடுத்து கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி, மாமியாரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். கர்நாடகா மாநிலம் ெபங்களூரு அடுத்த சிக்கபனாவரா பகுதியில் கேட்பாரற்று நின்றிருந்த காரை போக்குவரத்து ேபாலீசார் சோதனையிட்டனர். அப்போது அந்த காருக்குள் ஒருவர் இறந்து கிடப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வடக்கு பெங்களூரு டி.சி.பி சைதுல்...
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பிரகாஷ் ராஜூ மற்றும் சரிதா ராமராஜூ தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது. இப்படி மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களது திருமணம் வாழ்வில், கடந்த 2018 ல் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து செய்துள்ளனர். எனவே, தங்களது 11 வயது குழந்தை யாரிடத்தில் வளர வேண்டும் என்பது குறித்து வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. நீதிமன்ற...
திருவண்ணாமலை மாவட்டத்தில் காதல் திருமணம் செய்துக் கொண்ட ஜோடி ஒன்று பாதுகாப்பு கேட்டு திடீரென காவல் நிலையத்திற்குள் தஞ்சமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் கடந்த 24 வருடங்களாக அந்த பகுதியில் சமூக சேவை செய்து வருகிறார். இந்நிலையில் மணிமாறன். திருப்பத்தூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரைக் கடந்த 1½ வருடங்களாக காதலித்து வந்துள்ளார். அதன் பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பெண்ணின்...
உள்ளங்கைக்குள் உலகம் என்றான பின்னர், கூகுள் டாக்டரை நம்பி உயிரை இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் போலவே, மருத்துவ ஆலோசனைகளுக்கு யூ-ட்யூப்பில் வரும் நிறைய குப்பை வீடியோக்களை உண்மையென்று பலரும் நம்பி தங்கள் உயிரோடு விளையாடுகின்றனர். இந்நிலையில், தனக்குத்தானே யூ ட்யூப் வீடியோ பார்த்து அதிர வைத்திருக்கிறார் இளைஞர் ஒருவர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் மதுரா மாவட்டம் சுன்ராக் கிராமத்தில் வசித்து வருபவர்ராஜா பாபு(32). இவருக்கு சமீப காலமாக மிகக் கடுமையான வயிற்று...
உத்திரப்பிரதேச மாநிலத்தில் காஜியாபாத்தின் லோனியில் உள்ள ட்ரோனிகா நகரில் சோனுவின் மகன் தீபான்ஷூவுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் சந்தோசமாக நடந்தது. அதன்படி நேற்று ஹால்டி விழா நடைபெற்றபோது சந்தோஷமாக நடந்து முடியும் என உறவினர்கள் நினைத்தனர். இந்நிலையில், அங்கு வந்த மணமகனின் பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் வன்ஷ் வால்மீகி பரபரப்பை கிளப்பும் வகையில் துப்பாக்கிச்சூடு நடத்தினார். திடீரென இந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதை பார்த்ததும் நிகழ்ச்சியில்...
இந்திய வம்சாவளி மாணவி திவ்யா 100 வருட கணித சிக்கலுக்கு தீர்வு கண்டுபிடித்துள்ளார். இந்திய வம்சாவளி மாணவியான திவ்யா தியாகி(Divya Tyagi), அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தில், விண்வெளிப் பொறியியலில் முதுநிலைப் பட்டக்கல்வி பயின்று வருகிறார். திவ்யா தியாகி, 100 ஆண்டுகளாக தீர்க்க முடியாத கணித சமன்பாடு ஒன்றிற்கு தீர்வு வழங்கியுள்ளார். 1928 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் காற்றியக்கவியலாளர் ஹெர்மன் கிளாவர்ட்(Hermann Glauert), உருவாக்கிய சிக்கலான கணித பிரச்சனைக்கு திவ்யா தற்போது...
வெறும் 1 ரூபாயை மாத சம்பளமாக எடுத்துக்கொண்ட இந்தியாவின் பணக்கார IAS அதிகாரியைப் பற்றி தெரியுமா? இந்தியாவில் பல ஐஏஎஸ் (IAS) மற்றும் ஐபிஎஸ் (IPS) அதிகாரிகள் புகழ்பெற்றுள்ளனர். ஐஏஎஸ் டினா தாபி, ஐபிஎஸ் அமித் லோதா போன்றோர் இதற்கு உதாரணம். ஆனால், இந்தியாவின் மிகவும் பணக்கார ஐஏஎஸ் அதிகாரி யார்? என்றால், அந்த பட்டம் அமித் கட்டாரியாவிற்கு சொந்தமானது. இவரின் தனித்துவம் என்னவெனில், இவர் முதலில் வெறும் 1 ரூபாயை...
காதலனை பார்க்க 4 குழந்தைகளுடன் பாகிஸ்தானில் இருந்து ஓடிவந்த பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதருக்கு 4 குழந்தைகள் உள்ளன. இவருக்கு பப்ஜி விளையாட்டு மூலம் இந்தியாவில் உள்ள உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் மீனா மீது காதல் வந்துள்ளது. இவர் தன்னுடைய கணவரை விட்டுவிட்டு 4 குழந்தைகளுடன் சட்டவிரோதமாக நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து சச்சின் மீனாவுடன் கிரேட்டர் நொய்டாவில் வசித்து வந்தார். பின்பு, சீமா...